இத்தனை நாள் தொகுதிப் பக்கம் ஏன் வரல? கரூரில் ஜோதிமணியை சூழ்ந்த மக்கள்.. சரமாரிக் கேள்வி!
ஜோதிமணி இன்று கோடங்கிபட்டி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பிரசாரம் செய்தார். பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவரை ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இந்த சமயத்தில் கையில் ஆரத்தியுடன் நின்ற பெண் ஒருவர் ஜோதிமணியிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார்.
அதாவது கடந்த தேர்தலில் ஓட்டு கேட்டபோது உங்களை பார்த்தோம். அதன்பிறகு இப்போது மீண்டும் ஓட்டு கேட்க வந்ததால் உங்களை பார்க்கிறோம். இவ்வளவு நாள் ஏன் வரவில்லை? ஓட்டு கேட்க மட்டும் ஏன் வருகிறீர்கள்? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளார்.
இதையடுத்து ஜோதிமணி அருகே நின்ற திமுக நிர்வாகிகள் அப்புறமாக அதனை பேசி கொள்ளலாம் எனக்கூறி ஜோதிமணியை அங்கிருந்து அழைத்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தொகுதியில் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் ஜோதிமணி திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் லட்சத்து 95 ஆயிரத்து 697 ஓட்டுகள் பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தம்பித்துறை 2 லட்சத்து 75 ஆயிரத்து 151 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இதன்மூலம் ஜோதிமணி 4,20,546 ஓட்டுகள் வித்தியாசத்தில வெற்றி பெற்றார். தற்போது அவர் மீண்டும் போட்டியிட உள்ள நிலையில் அவர் வெல்வாரா? என்பது ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் ஜுன் 4ம் தேதி தெரிந்துவிடும்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.