முடிஞ்சு போன சனாதனப் பிரச்சனையை பற்றி திரும்ப திரும்ப ஏன் பேசறீங்க : செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி காட்டம்!!

முடிஞ்சு போன சனாதனப் பிரச்சனையை பற்றி திரும்ப திரும்ப ஏன் பேசறீங்க : செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி காட்டம்!!

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து ஒன்று அவரை தேசியளவில் பிரபலம் அடைய வைத்துவிட்டது. ஆந்திராவில் தலித் இளைஞர்கள் சிலர் உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு பால் அபிஷேகம் செய்யும் அளவுக்கு அவர் தேசியளவில் கவனம் ஈர்த்துள்ளார். பிரதமர் மோடி உட்பட மத்திய அமைச்சர்கள் பலரும் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சுக்கு எதிர் வினையாற்றினர்.

ஒரே வாரத்தில் இந்தியா முழுவதும் உதயநிதி பேசப்பட்டார். இந்தச் சூழலில் அவர் பேசிய கருத்து பற்றி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு கடுகடுத்த அன்புமணி, ”யப்பா, சனாதனத்தை விட்டால் பேசுவதற்கு வேறு எதுவுமே இல்லையா, நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளன. காவிரியில் கர்நாடகா தண்ணீர் கொடுக்க மறுப்பு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, மின் கட்டணம் உயர்வு, வேலைவாய்ப்பு இல்லாமல் தமிழ்நாட்டில் 1.5 கோடி பேர் உள்ளார்கள், இதைப்பற்றியெல்லாம் பேச வேண்டும்.”

‘அதை விட்டுவிட்டு முடிஞ்சு போன ஒன்றை திரும்ப திரும்ப பேசக்கூடாது, அடுத்தது என்னவோ அதை பேசணும், சனாதனம்.. சனாதனம்..ன்னு இன்னும் அதையே கேட்காதீர்கள்” என செய்தியாளர்களிடம் கூறினார் அன்புமணி.

அதேபோல் இந்தியா என்கிற பெயரை பாரத் என்று மாற்றப்படுவதாக சொல்கிறார்களே, அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என செய்தியாளர்கள் வினவினர். முதலில் அது குறித்த முடிவை மத்திய அரசு எடுக்கட்டும் அதன் பிறகு கருத்து தெரிவிக்கிறேன் எனக் கூறி அந்தக் கேள்விக்கு பதிலளிப்பதிலிருந்தும் நழுவிக்கொண்டார் அன்புமணி ராமதாஸ்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரோகித்தின் மோசமான உலக சாதனை.. தீயான குல்தீப் யாதவ்.. திணறிய நியூசிலாந்து.. இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…

8 hours ago

மனவருத்தம் இல்லை.. ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் பிரேமலதா அதிரடி பதில்!

ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…

9 hours ago

திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!

சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…

11 hours ago

கூட்டணி குறித்து கேட்டால் இதைச் சொல்லுங்க.. அதிமுகவிடம் எதிர்பார்ப்பு.. முக்கிய காய் நகர்த்தும் இபிஎஸ்

அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…

12 hours ago

வாய்க்காலில் கிடந்த சடலம்.. சிக்கிய நண்பர்கள்.. திருட்டால் பறிபோன உயிர்!

கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…

13 hours ago

மேட்ச் முடிவில் காத்திருக்கும் அதிர்ச்சி.. டாப் 3 வீரர்களின் நிலைப்பாடு என்ன?

இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…

14 hours ago

This website uses cookies.