நெல்லை : பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி நீராவி முருகனை என்கவுண்ட்டர் செய்ய என்ன காரணம் என்பது குறித்து நெல்லை போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த களக்காடு அருகே பதுங்கியிருந்த பிரபல ரவுடி நீராவி முருகனை, திண்டுக்கல்லில் தொடர்புடைய வழக்கு ஒன்றிற்காக கைது செய்த திண்டுக்கல் தனிப்படை போலீசார் விரைந்தனர். அப்போது, பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி நீராவி முருகனை, போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்தனர்.
ரவுடி நீராவி முருகனை கைது செய்ய முயன்ற போது போலீசாரை தாக்கியதால், தற்காப்புக்காக என்கவுன்டர் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த என்கவுன்ட்டர் சம்பவம் குறித்து நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன் கூறியதாவது :- நீராவி முருகன் மீது கடத்தல் உள்பட 80க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. வழக்கு ஒன்றுக்காக நீராவி முருகனை கைது செய்ய திண்டுக்கல் போலீசார் வந்துள்ளனர். அவனை கைது செய்ய பின்தொடர்ந்து சென்ற போது, காவல் ஆய்வாளர்கள் மீது அரிவாளால் தாக்கியுள்ளான். இதனால், தற்காப்புக்காக தங்களிடம் இருந்த கைத்துப்பாக்கியை வைத்து சுட்டுள்ளனர். இதில், அவன் இறந்துள்ளான். 4 போலீசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டுள்ளது.
நீராவி முருகன் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் உள்ளன. குறிப்பாக, கடுமையான ஆயுதங்களைக் காட்டி பெண்களிடம் வழிப்பறி செய்வான். பெண்களை தொல்லையும் செய்துள்ளான். ஒரு தவறு செய்தால், அதோடு நிறுத்திக் கொள்ள மாட்டான். தொடர்ந்து 4,5 குற்றங்களை செய்வான், எனக் கூறினார்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.