மத்திய பிரதேசம், உஜ்ஜைனில் காரில் கணவர் உடன் இருந்த கள்ளக்காதலியை மனைவி அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் ஜிதேந்திரா மாலி – உஷா ஆர்யா என்ற தம்பதி வசித்து வருகின்றனர். இதில், கணவர் ஜிதேந்திர மாலிக்கு வேறு ஒரு பெண் உடன் தொடர்பு இருப்பதாக உஷா ஆர்யாவுக்கு தகவல் கிடைத்து உள்ளது. இது குறித்து கணவரிடம் கேட்டதற்கு மழுப்பலாக பதிலளித்து வந்து உள்ளார்.
எனவே, நேரம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என உஷா ஆர்யா இருந்து உள்ளார். இந்த நிலையில் தான் ஜிதேந்திரா மாலி தனது பெண் தோழி உடன் காரில் உல்லாசமாகச் சுற்றிவிட்டு, உஜ்ஜைன் சாலையில் வலம் வந்து உள்ளார். அப்போது, அதனை மனைவி உஷா பார்த்து உள்ளார்.
பின்னர், உடனடியாக காரை நிறுத்திய உஷா, கதவைத் திறந்து, உள்ளே இருந்த பெண் தோழியான பூஜா என்ற பெண்ணை சரமாரியாத் தாக்கத் தொடங்கினார். இதனை அங்கு இருந்த ஒருவர் வீடியோ எடுத்து உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பூஜாவின் முடியைப் பிடித்து இழுக்கும் உஷா, அவரது கன்னத்தில் மாறி மாறி அறைகிறார். தொடர்ந்து, அவரை காரில் இருந்து வெளியே இழுத்த உஷா, மீண்டும் மீண்டும் அவரை அறைகிறார். இதனை காரினுள் அமர்ந்தவாறே முகத்தை மறைத்துக் கொண்டு அவரது கணவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: மனைவியுடன் உடலுறவு கொள்வது குற்றமே.. மும்பை ஐகோர்ட் அதிரடி!
ஆனால், இத்தனை அமளிக்கு மத்தியிலும் பூஜா, ‘எனக்கு அவர் தான் வேண்டும். நாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம்’ எனக் கூறுகிறார். இதனையடுத்து அடி இன்னும் அதிகமாகிறது. இதனையடுத்து, ‘நீங்கள் யார்? எனக்கு யார் என்றே தெரியவில்லை’ என பூஜா கூற, ‘நான் அதனை காவல் நிலையத்தில் சொல்கிறேன்’ என சினிமாவில் வசனம் பேசுவது போல் உஷா கூறுவதுடன் வீடியோ முடிவடைகிறது.
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம்…
டாப் நடிகை தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தென் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.…
This website uses cookies.