98% வடிகால் பணி முடிந்தது என கூறிய அமைச்சர்.. இப்போ 42% முடிந்ததாக சொல்கிறார்.. ஊழல் திமுக அரசு இனியாவது உண்மையை பேசுமா? அண்ணாமலை சுளீர்!

98% வடிகால் பணி முடிந்தது என கூறிய அமைச்சர்.. இப்போ 42% முடிந்ததாக சொல்கிறார்.. ஊழல் திமுக அரசு இனியாவது உண்மையை பேசுமா? அண்ணாமலை சுளீர்!

மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த பெரும் மழையால் சென்னையே தண்ணீரில் தவிக்கிறது. குறிப்பாக, வேளச்சேரி, பள்ளிக்கரணை, பெரம்பூர், வியாசர்பாடி, கொளத்தூர், திருவொற்றியூர் உட்படச் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை அவதிக்குள்ளாக்கிவருகிறது. அதிகாரிகளும், பேரிடர் மீட்புக்குழுவினரும் தொடர்ந்து மழைநீரை வெளியேற்றுதல், மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் உட்பட, அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மாநகராட்சி அதிகாரிகள் எனப் பலரும் நீர் தேங்கியிருக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துவருகின்றனர். அதேசமயம், `முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க அரசு சரியாக மேற்கொள்ளவில்லை’ என எதிர்க்கட்சிகள் விமர்சித்தும் வருகின்றன.

அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், `சென்னை மாநகரில் சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளநீர் வடிகால் பணிகள் நடந்தாக தி.மு.க அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. நடந்து முடிந்த பணிகளின் பட்டியலை வெளியிட தி.மு.க அரசு தயாரா… பணி முடிந்த ஒவ்வோர் இடத்துக்கும் செலவிட்ட தொகை கணக்கைத் தரத் தயாரா… பணிகள் 100 சதவிதம் முடிந்த இடங்கள், தொடர்ந்து பணி நடைபெறும் இடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை தி.மு.க அரசின் முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும்.

ஏதாவது சொல்லி, ஏமாற்றித் தப்பித்துவிடலாம் என்று இந்த நிர்வாகத் திறனற்ற ஆட்சியாளர்கள் நினைத்தால், அதற்குண்டான பதிலைப் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் வெளிப்படுத்துவார்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், மாநகர நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், “மழைநீர் வடிகால் பணிகளின் மொத்த மதிப்பீடு ரூ.5,166 கோடி. ஆனால் இதுவரை ரூ 2,191 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே நிறைவடைந்திருக்கின்றன. மீதமுள்ள 3,000 ரூபாய் கோடிக்கானப் பணிகள் தொடர்ந்து நடைபெறும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

இதைபற்றி விமர்சித்துள்ள அண்ணாமலை, தனது X தளப் பக்கத்தில், கடந்த மாதம் திமுக அமைச்சர் கே.என் நேரு, புயல் நீர் வடிகால் தொடர்பான 98% பணிகள் முடிந்துவிட்டதாகவும், ஒரு மணி நேரத்தில் 20 சென்டிமீட்டர் மழையை வெளியேற்றும் திறன் கொண்டுள்ளதாகவும் கூறினார்.

ஆனால், இன்றைய செய்தியில், 42% மழைநீர் வடிகால் மட்டுமே நிறைவடைந்துள்ளதாக திரு கே.என்.நேரு உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோவையும் பதிவிட்ட அண்ணாமலை, சென்னை மக்களுக்கு பேரழிவு ஏற்படுத்திய இந்த வெள்ளத்திற்கு பிறகாவது ஊழல் திமுக அரசு இனியாவது உண்மையைப் பேசுமா? என பதிவிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

14 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

14 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

15 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

15 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

16 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

16 hours ago