மகளிருக்கான ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் விவகாரத்தில் திமுக அரசு அந்தர் பல்டி அடித்துவிட்டதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
2023-24ம் நிதியாண்டுக்கான பொதுபட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். அப்போது, எதிர்கட்விச தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து பேச முற்பட்டார். ஆனால், சபாநாயகர் அப்பாவு இதற்கு அனுமதி மறுத்தார்.
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை பேச அனுமதிக்காததை கண்டித்து கோஷமிட்ட அதிமுகவினர், அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது :- திமுக ஆட்சியில் சொத்து வரி, பால் கட்டணம் உள்ளிட்ட எல்லா வரிகளும் கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஜி.எஸ்.டி., கலால் வரி, பத்திரப்பதிவு, பெட்ரோல், டீசல் வரி வருவாய் உயர்ந்து இருப்பதால், அரசின் வருவாய் பற்றாக்குறை பூஜ்ஜியமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. அதற்கு காரணம் என்ன..? திமுக ஆட்சியில் வரி வருவாய் அதிகரித்த போதும் வருவாய் பற்றாக்குறை ரூ.30 ஆயிரம் கோடியாக உள்ளது.
அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் என்று சொல்லிவிட்டு, தற்போது தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மட்டும்தான் என்று அந்தர் பல்டி அடித்துள்ளது. அதோடு, ரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்னவென்று தெரிவிக்கவில்லை.
ரூ.7000 கோடி ஒதுக்கிவிட்டு 1 கோடி பேருக்கு ரூ.1000 கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறையை குறைக்க எந்த திட்டமும் வகுக்கவில்லை. நீட விலக்கு ரகசியத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம், எனக் கூறினார்.
கேரளா, கண்ணூரில் யூடியூபில் உடல் எடையைக் குறைக்க டிப்ஸ் பார்த்து ஃபாலோ செய்த இளம்பெண் உயிரிழந்துள்ளதால் சோகம் ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம்:…
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
This website uses cookies.