சென்னையில் திமுக போராட்டத்தின் போது, அவ்வழியாக பைக்கில் வந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெசன்நகர் 179வது வார்டுக்குட்பட்ட வார்டில் வாக்கு இயந்திரத்தை சேதப்படுத்தியதாக திமுக வேட்பாளரின் கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண்கள், சாலையோரமாக போராட்டக்காரர்களை கடந்து செல்ல முயன்றனர்.
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்த ஒருசிலர், அந்தப் பெண்களின் வாகனத்தை இழுத்து தள்ளி வம்புக்கு இழுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பெண்களும் பைக்கில் இருந்து இறங்கிச் சென்று பதிலுக்கு எதிர்ப்பு குரல் கொடுத்தனர். இதனால், அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், அங்கிருந்த சிலர் பெண்களை பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, திமுக போராட்டத்தின் போது பெண்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.