மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. கூச்பெஹாரில் மாதாபங்கா பகுதியில் அக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி, அகில இந்திய பொது செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.
இந்த நிலையில், கூட்டத்தில் தேசிய கீதம் பாடப்பட்டது. இதனை படித்த ஒருவர் தவறாக ஒரு வரியை விட்டு விட்டார் என்றும் அதற்கு அடுத்த வரியை 2 முறை திருப்பி படித்து உள்ளார் என்றும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
ஒரு பொது கூட்டத்தில் தேசிய கீதம் தவறாக பாடப்பட்டு உள்ளது என பா.ஜ.க. கடுமையாக கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் சுகந்த் மஜும்தார் வீடியோ ஒன்றை சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளார். அது வைரலாக பரவி வருகிறது.
இது என்ன அபிஷேக் அவர்களே? தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுத்து, அதனை சரியாக பாட கூட உங்களால் முடியவில்லை. தவறாக பாடியது அவமரியாதையை வெளிப்படுத்தி உள்ளது. வெட்கக்கேடு என தெரிவித்து உள்ளார்.
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…
This website uses cookies.