அதிமுக – பாஜக இடையே கருத்து மோதல் நிலவி வரும் சூழலில் நேற்று அண்ணாமலை பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பேசியதாவது :- தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். பிரதமர் மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளேன். கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் வருகிற மே மாதம் 10-ந்தேதி வரை கட்சி பணிகளில் ‘பிஸி’யாக இருப்பேன், எனக் கூறினார்.
அவரது இந்தப் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்த துணை தலைவர் நாராயணன் திருப்பதி, உங்களுடைய (அண்ணாமலை) பேச்சு தெளிவாக இல்லை. அதனால் விளக்கமாக கூறுங்கள் என்றார். இதற்கு பல்வேறு தரப்பினர் ஆட்சேபணை தெரிவித்தனர். மேலும், அண்ணாமலையின் கருத்துக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர், பேசிய கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், கட்சியின் மைய குழுவில் பேசவேண்டிய கருத்தை ஏன் இப்போது பேசுகிறீர்கள்? என்று கேட்டார். இதற்கும் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்த சம்பவங்கள் நடப்பதற்கு முன்பே பாஜக நிர்வாகியும் நடிகருமான எஸ்.வி.சேகர் ஒரு பூடகமான ட்வீட்டை போட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், தம்பி ஆபீஸ் போகலியா ?எதுத்த வீட்டு பையன் பக்கத்து வீட்டு பையன் ஆபீஸ் போறாங்களா? நானும் வீட்டுலயே வேலை செய்வேன்.
?அட மண்டு அவங்க கம்பெனி முதலாளி. நீ வெறும் பிரான்ச் மேனேஜர் 24 வரைக்கும் உன்னை வேலயில வச்சிருப்பாங்களான்னே தெரியலை.
இனிமே பழைய வேலைக்கும் போகமுடியாது. கிளம்பு.. என கூறியிருக்கிறார். அதாவது யார் பெயரையும் குறிப்பிடாமல் போட்டுள்ள இந்த ட்வீட் அண்ணாமலையை குறிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவர்தான் நான் மேனேஜர் இல்லை என்றார், இதற்கு முன்பு பணியாற்றிய ஐபிஎஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டார். எனவே அண்ணாமலையை எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.