உங்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் லக் இல்லை.. வேறு சின்னத்தை தேர்வு செய்யுங்க : சீமானுக்கு நீதிமன்றம் அட்வைஸ்!
நாம் தமிழர் கட்சிக்கு 2024வது ஆண்டு சோதனையான ஆண்டு என்றே தான் சொல்ல வேண்டும். குறிப்பாக இந்த ஆண்டு தொடக்கமே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ சோதனை மேற்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து கட்சி சின்னம் கிடைப்பது கேள்விக்குறியாகவே உள்ளது, இதனால் சீமான் கடும் அப்செட்டில் உள்ளார், நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்து பிரசாரம் செய்து வருகிறது.
ஆனால் தேர்தல் ஆணையம் அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஆகியதா என்ற கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. இது சீமான் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து சட்டப்போராட்டத்தை முன்னெடுத்த நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தை பிஏபி கட்சியிடம் இருந்து கேட்டு பெறும் நடவடிக்கைகளை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டனர். மேலும் டெல்லி உயர்நீதிமன்றத்தில், தங்களது கட்சிக்கே கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி வழக்கும் தொடர்ந்தது நாம் தமிழர் கட்சி.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது தலைமை நீதிபதி, நாம் தமிழர் கட்சி என்பது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல. ஒரு கட்சிக்கு குறிப்பிட்ட எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் இருந்தால்தான் நிரந்தரமாக ஒரு சின்னத்தை ஒதுக்கவும் கோரிக்கை வைக்க முடியும்.
கரும்பு விவசாயி சின்னம் என்பது பொதுவான சின்னம். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கிவிட்டது. இதனைத்தான் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு நடைமுறையாக பின்பற்றுகிறது.
இந்த நடைமுறையை எப்படி மாற்றிவிட முடியும்? நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் லக்கியான சின்னமாக இல்லை போல தெரிகிறது. ஆகையால் வேறு ஒரு சின்னத்தை தேர்வு செய்து போட்டியிடலாம் என கருத்து தெரிவித்தார்.
அத்துடன் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்ய வேண்டும் என்ற நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையையும் டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மேலும் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது டெல்லி உயர்நீதிமன்றம். இது சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பெரும் பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.