சென்னையில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம்: தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்…உண்மை வெளியாகுமா?

சென்னை: போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக தேசிய மனித ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கைத்தை சேர்ந்தவர் விக்னேஷ், இவர் மெரினா கடற்கரையில் குதிரையை சவாரிக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பரான திருவல்லிக்கேணியை சேர்ந்த சுரேஷ் என்பவர் பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகிறார்.

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் புரசைவாக்கம், கெல்லீஸ் சிக்னல் பகுதியில் ஆட்டோவில் சென்றுள்ளனர். அப்போது அங்கு சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, அந்த வழியாக ஆட்டோவில் வந்த இளைஞர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். அந்த சமயம், போலீசார் கேள்விக்கு முன்னுக்கு பின் முரணமாக பதிலளித்ததாகவும், மேலும், போலீசாரை தாக்கி விட்டு தப்பித்து ஓடவும் முயற்சித்ததாகவும், அவர்களிடம் கத்தியும், கஞ்சா பொட்டலமும் இருந்ததாக போலீஸ் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, பிடிபட்ட இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததாகவும், அங்கு விக்னேஷுக்கு வலிப்பு ஏற்பட்டு, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வலியில் அவர் உயிரிழந்ததாகவும் போலீசார் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல் குறித்து பிரபல பத்திரிகைகளும், ஊடகங்களும் எந்த செய்தியும் வெளியிடாத நிலையில், யூடியூப் சேனல்கள் மூலம் தகவலை அறிந்த விக்னேஷ் உறவினர்கள், மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால் விக்னேஷின் உடலை பார்க்க அவர்களுக்கு காவல்துறை அனுமதிக்காதால், விக்னேஷ் உடலை வாங்க அவரது உறவினர்கள் மருத்துவமனையில் காத்திருந்தனர்.

இந்நிலையில், விக்னேஷின் உடலை தாங்களே இறுதிசடங்கு செய்து அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் விக்னேஷின் உடலை அவரது சகோதரர் வினோத்குமார் பார்த்தாகவும், முகம் மற்றும் உடலில் காயங்கள் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், விக்னேஷ் மரணம் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், விக்னேஷின் மரணம் இயற்கை மரணம் அல்ல, இது சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு போல போலீசாரால் நிகழ்த்தப்பட்ட மரணம் என கூறிய வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னையில் விக்னேஷ் என்ற வாலிபர் காவல்நிலையத்தில் மரணித்தது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஏ சங்கர், டெல்லியை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அமல் காந்தி சக்மா ஆக இருவரும் இணையதளத்தின் வாயிலாக புகார் அளித்துள்ளதாக ட்விட்டரில் தகவல் வெளியாகியுள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!

படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…

2 hours ago

நீட் தேர்வுக்கான அனைத்துக்கட்சி கூட்டம் ஒரு நாடகம்.. இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…

2 hours ago

அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!

பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…

2 hours ago

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

4 hours ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

5 hours ago

This website uses cookies.