ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ஆட்சியில் இருந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ம் தேதி ஜெகன் மோகன் தாயார் விஜயம்மா அனந்தபுரம் மாவட்டம் குத்தியில் நடந்த திருமண விழாவில் பங்கேற்று குடும்பத்தினருடன் ஐதராபாத் சென்று கொண்டுருந்தார்.
அப்போது வழியில், கர்னூல் நகரின் பி.கேம்பில் தங்கியிருந்த டாக்டர் அய்யாபுரெட்டி (ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டியின் நண்பர்) வீட்டுக்குச் செல்ல விரும்பினார்.
இதற்காக கர்னூல் ஆர்டிசி காலனி அருகே கார் சென்றபோது காரின் இடதுபுறம் இருந்த இரண்டு டயர்களும் ஒரே நேரத்தில் திடீரென வெடித்தன. வாகனம் குறைந்த வேகத்தில் சென்றதால் டிரைவர் உஷாராகி உடனடியாக காரை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவீர்க்கப்பட்டு விஜயம்மா உயிர் தப்பினார்.
பின்னர் எஸ்கார்ட் வாகனத்தில் அய்யாப்புரெட்டியின் வீட்டுக்குச் சென்று உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவரைப் பார்வையிட்டார். அதன் பிறகு மாற்று வாகனத்தில் ஐதராபாத் சென்றார்.
இந்த வாகனம் ஆறு மாதங்களுக்கு முன் வாங்கப்பட்ட உயர்ரக சொகுசு காராக உள்ள நிலையில் திடிரென காரின் டயர்கள் இரண்டும் ஒரே நேரத்தில் வெடித்ததில் விஜயம்மா உயிர் தப்பினார். இந்த சம்பவத்தில் சில மாதங்களுக்கு பிறகு விஜயம்மா அமெரிக்கா சென்று அங்கேயே தங்கி இருக்கிறார்.
இந்நிலையில் கார் டயர் வெடித்த சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுருந்த கார் வீடியோவை பதிவு செய்த தெலுங்கு தேச கட்சி தனது அதிகார பூர்வ சமூக வலைதளத்தில் சாலையோரம் இருக்கும் இந்த விலையுயர்ந்த கார் யாரே ஒருவருக்குண்டானது இல்லை.
நூற்றுக்கணக்கான பேரை வைத்துக்கொண்டு இருக்கும் பல கோடி சொத்துக்கு சொந்தக்காரரான ஜெகன் மோகன் ரெட்டி தாயாரும் முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் மனைவி விஜயம்மா சென்ற வாகனம் இது.
அவரது பாதுகாப்பு, புத்தம் புதிய கார், அதிநவீன பாதுகாப்பு வசதி கொண்ட கார் என இவ்வளவு இருந்தும் ஒரே நேரத்தில் இரண்டு சக்கரங்கள் வெடித்துள்ளது.
இவ்வளவு ஹை என்ட் காரைப் பார்த்ததும், புதிய காருக்கு இப்படி இவ்வாறு நடந்தது என பலரும் முதலில் ஆச்சரியப்பட்டு பிறகு நமது சைக்கோ ( ஜெகன் மோகன் ) பின்னணியை அறிந்து என்ன நடந்தது என்று யூகித்தனர்.
இவை அனைத்தும் 2024 தேர்தலுக்கு முன் நடந்தவை. 2019 தேர்தலுக்கு தனது சித்தப்பாவை கொன்றது போல இந்த தேர்தலுக்கு ஜெகன் மோகன் இன்னொரு பெரிய தலையை குறிவைப்பாரா ? என்று ஆந்திர மக்கள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் இது நடந்தது.
சம்பவத்திற்கு பிறகு விஜயம்மா அமெரிக்காவிலேயே தங்கியிருக்கிறார். அந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தம் என தெரிவித்திருந்தது.
இந்த பதிவு தற்போது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு விஜயம்மா தனது மகள் ஷர்மிளாவிற்கு முழு ஆதரவு தெரிவித்து தேர்தலிலும் அவருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என வீடியோ வெளியிட்டு ஆதரவு திருட்டினார்.
மேலும் சொத்து பிரச்சனையில் மகளுக்கு ஆதரவாக நின்றுள்ள நிலையில் இது குறித்து வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்று துணை முதல்வர் பவன் கல்யாண் ஒரு கட்சி தலைவரின் ( ஜெகன் மோகனின் தங்கை ) என் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என கேட்கிறார்.
உங்கள் அண்ணன் உங்களுக்கு பாதுகாப்பு வழங்காமல் இருந்திருக்கலாம் ஆனால் உங்கள் உயிரை நாங்கள் காப்போம். நீங்கள் எங்களை விமர்சிக்கலாம் மதசார்பின்மை இருக்கும் வரை நீங்கள் விமர்சித்தாலும் நாங்கள் உங்களுக்கு துணையாக இருப்போம்.
இது எங்கள் பொறுப்பு நீங்கள் ஒரு கட்சியின் தலைவராக உள்ளீர்கள் எனவே உங்கள் பாதுகாப்பிற்கு விண்ணபித்தால் முதல்வருடன் பேசி உங்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என கூறி உள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.