கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய ரெய்டில் கணக்கில் வராத பணம், நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து போலீசார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று தமிழகம் முழுவதும் 58 இடங்களிலும் கேரள மாநிலத்தில் ஒரு இடத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேற்படி சோதனையில் தங்க நகைகள் 11.153 கிலோ கிராம், வெள்ளி சுமார் 118.506 கிலோ கிராம் மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்படும், கணக்கில் வராத ரூ.84 லட்சம் பணமும் அதோடு கைபேசிகள் பல வங்கி பெட்டகங்களின் சாவிகள், மடிக்கணினி, ஹார்டு டிஸ்குகள் மற்றும் வழக்கில் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் 34 லட்சம் ரூபாய் அளவிற்கு கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு புலன் விசாரணையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.