திருவள்ளுர் : 73வது குடியரசு தினவிழாவையொட்டி மூவர்ணக் கொடிவண்ணத்தில் தொடர்ச்சியாக 73 நிமிடம் 73 நொடிகள் சிலம்பம் சுற்றி 73 மாணவர்கள் இந்திய புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு சாதனை புரிந்தனர்.
திருவள்ளுர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த வடகரை ஆதிதிராவிடர் மேல் நிலைபள்ளி அரசினர் தொழில் பயிற்சி வளாகத்தில் 73 வது தினவிழாவையொட்டி தமிழரின் பாரம்பரிய சிலம்ப கலை மூலம் 73 சிலம்பாட்ட மாணவர்கள் 73 நிமிடம் 73 நொடிகள் மூவர்ண கொடி நிறத்தில் தொடர்ச்சியாக இடைவிடாமல் சிலம்பம் சுற்றி கொரோனா விதிகளுக்கு உட்பட்டு சாதனை நிகழ்த்தினர்.
இந்நிகழ்வை இந்தியா புக்ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் மேனேஜிங் டைரக்டர் சதாம் உசேன் துவக்கி வைத்தார். இதில் திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு சிலம்ப சங்க செயலாளர் ஹரிதாஸ், சிலம்ப ஆசான் ரதிராஜா மற்றும் ஆண்டணி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு பாராட்டு சான்று மற்றும் பதக்கங்களை வழங்கினர். மாணவர்கள் நிறுத்தாமல் தொடர்ந்து இந்த சாதனை இந்திய புக்ஆப் வேல்ட் ரிக்கார்ட் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.