Categories: Uncategorized @ta

73-வது குடியரசு தினம்: தேசிய கொடி ஏற்றி மாவட்ட ஆட்சியர் மரியாதை!

தருமபுரி : 73-வது குடியரசு தினவிழாவையொட்டி இன்று தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார்கள்.

இந்தியாவின் 73 வது குடியரசு தினவிழாவையொட்டி தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 27 காவலர்களுக்கு 2022 - ஆம் ஆண்டிற்கான தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களையும், வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, 

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, பேரூராட்சிகள் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊராட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 50 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 39 மருத்துவர்களுக்கும்,

உள்ளாட்சி அமைப்புகளில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 12 தூய்மை பணியாளர்களுக்கும் என மொத்தம் 101 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி வழங்கினார். கொரோனா தொற்று காரணமாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெரும் கலை நிகழ்சிகள் இல்லாமல் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்டத்தில் குடியரசு தினவிழா மற்றும் சுதந்திர தினவிழாகளில் நடைபெரும் சிறப்பு கிராம சபை கூட்டங்களுக்கும் தடை விதிக்கபட்டதால் இந்த குடியரசு தினவிழா கலையிழந்து காணப்பட்டது.

KavinKumar

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

1 hour ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

2 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

3 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

3 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

4 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

4 hours ago

This website uses cookies.