Categories: Uncategorized @ta

“சிக்கன் பிரியாணியால் வந்த தகராறில் பறிபோன உயிர்!”- சென்னையில் சோகம்!

சென்னை மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் 6வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பாபு.இவர் குவைத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சந்தியா.இவர்களுக்கு தாரிஸ் என்ற 16 வயது மகனும், கோகுல் என்ற மகனும் உள்ளனர். இதில் தாரிஸ் தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு அசைவ உணவு சுத்தமாக பிடிக்காது, சைவம் மட்டும்தான் உண்பார். இதனால் அவரது வீட்டில் சைவம் மட்டும்தான் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில்கடந்த 17ஆம் தேதி கோகுல் அவரது நண்பர்கள் கொடுத்த சிக்கன் பிரியாணியை வீட்டில் வைத்து சாப்பிட்டு உள்ளார். இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த தாரிஸ் தனது தம்பி கோகுலை திட்டி உள்ளார்.கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது அது தீவிரமான நிலையில் தாரிஸ் தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டுள்ளார்.தாரிசின் தாயார் அறைக்குள் சென்ற தாரிஸ் கோபமாக இருப்பான் சிறிது நேரத்தில் வந்து விடுவான் என்று நினைத்துக் கொண்டு சாதாரணமாக இருந்துள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் தாரிஸ் அறையை விட்டு வெளியே வராததால் அவரது தாயார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தாரிஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே தாரிஸ் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த தாம்பரம் போலீசார் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக தாரிசின் உடலை அனுப்பி வைத்து விசாரணை நடத்த வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Sangavi D

Share
Published by
Sangavi D

Recent Posts

அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…

7 hours ago

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

8 hours ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

10 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

10 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

11 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

12 hours ago

This website uses cookies.