Categories: Uncategorized @ta

“சிக்கன் பிரியாணியால் வந்த தகராறில் பறிபோன உயிர்!”- சென்னையில் சோகம்!

சென்னை மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் 6வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பாபு.இவர் குவைத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சந்தியா.இவர்களுக்கு தாரிஸ் என்ற 16 வயது மகனும், கோகுல் என்ற மகனும் உள்ளனர். இதில் தாரிஸ் தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு அசைவ உணவு சுத்தமாக பிடிக்காது, சைவம் மட்டும்தான் உண்பார். இதனால் அவரது வீட்டில் சைவம் மட்டும்தான் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில்கடந்த 17ஆம் தேதி கோகுல் அவரது நண்பர்கள் கொடுத்த சிக்கன் பிரியாணியை வீட்டில் வைத்து சாப்பிட்டு உள்ளார். இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த தாரிஸ் தனது தம்பி கோகுலை திட்டி உள்ளார்.கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது அது தீவிரமான நிலையில் தாரிஸ் தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டுள்ளார்.தாரிசின் தாயார் அறைக்குள் சென்ற தாரிஸ் கோபமாக இருப்பான் சிறிது நேரத்தில் வந்து விடுவான் என்று நினைத்துக் கொண்டு சாதாரணமாக இருந்துள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் தாரிஸ் அறையை விட்டு வெளியே வராததால் அவரது தாயார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தாரிஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே தாரிஸ் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த தாம்பரம் போலீசார் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக தாரிசின் உடலை அனுப்பி வைத்து விசாரணை நடத்த வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Sangavi D

Recent Posts

பிரபல நடிகர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. விரைவில் கைது? ரூ.5.90 கோடி பறிமுதல்!

ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…

20 minutes ago

வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை…ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை..!!

சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…

1 hour ago

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

16 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

17 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

17 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

17 hours ago

This website uses cookies.