Categories: Uncategorized @ta

எந்த சலசலப்பும் பாஜக அஞ்சாது : சிபி ராதாகிருஷ்ணன் பேட்டி…

திருப்பூர் : இந்த தேசம் உலகத்தின் முதல் நாடாக உயரவேண்டும் என்பதற்காக அர்ப்பணிப்போடு பணியாற்றுகின்ற கட்சி பாஜக என்றும் எந்த சலசலப்பும் பாஜக அஞ்சாது எனவும் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான சி.பி. ராதாகிருஷ்ணன் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:- திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக பாஜக எழுச்சியோடும் இந்த நகராட்சியை கைப்பற்றிய தீரவேண்டும் என்ற உத்வேகத்தோடு மிகச் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலான பொதுமக்கள் தாமாக முன்வந்து ஆதரவு தருகிறார்கள். ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை சந்தித்தோம் மலர்கொத்து கொடுத்து வரவேற்றார்கள். தெளிவாக சொன்னார்கள் அவருடைய தந்தை மொழிப்போர் தியாகி, ஆனால் நான் ஒரு ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளதாகவும்,

நான் மிகுந்த நாட்டுப் பற்று உடையவள், மோடியின் உடைய கரங்கள் வலுப்படுத்த வேண்டும், தமிழகம் இன்றைக்கும் என்றைக்கும் நம்முடைய முத்துராமலிங்கத்தேவர் கூறியதுபோல் தேசியம் தெய்வீகத்தின் பக்கம்தான் நிற்கும். வரப்போகின்ற தேர்தல் தாமரைக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும் கவர்னரை இழித்தும் பழித்தும் பேசுவது திமுகவின் வேடிக்கையாக உள்ளது. கவர்னர் எவ்வளவு சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். எல்லோரும் அறிவார்கள் கவர்னர் உரை என்பது கவர்னர் தருகின்ற உரை அல்ல அரசியல் சாசனம் என்ன சொல்கிறதோ அதை செய்வதுதான் கவர்னர் உடைய பணி சட்டமன்றத்திலே செய்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழக அரசு எதை எழுதி தந்திருக்கிறது மிகத் தெளிவாக தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் நீட் தேர்வு என்பது மறுக்கப்படுகின்ற பொழுது நீர் தேர்வு அதற்கு ஆதரவாக கவர்னர் கையெழுத்து இட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு திமுகவிற்கு இருக்கிறது. ஒரு கவர்னர் அரசியல் சாசனத்தை மீறி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக நடந்து கொண்டிருப்பது நடைமுறை சாத்தியம் இல்லை. இதை திராவிட முன்னேற்றக் கழகம் புரிந்து கொள்ள வேண்டும். அண்ணாமலை அவர்கள் மிகப் மிகப் பெரிய எச்சரிக்கையை திமுக அரசுக்கு தந்திருக்கிறார். அவர்கள் மட்டும் முரசொலியில் எழுதலாமா தொப்பென்று நினைத்தாயோ கொங்கணவா என்று எழுதுவார்கள்.

அதற்கு பதில் தரக்கூடாது என்று எதிர்பார்த்தால் அது நடைமுறையில் சாத்தியமில்லை. பாஜக தேசிய வெற்றி தோல்விகளை தாண்டி இந்த தேசம் உலகத்தின் முதல் நாடாக உயரவேண்டும் என்பதற்காக அர்ப்பணிப்போடு பணியாற்றுகின்ற கட்சி. காவி மறவர்களின் கட்சி எந்த சலசலப்பும் பாஜக அஞ்சாது. அவரவர்கள் ஜனநாயக ரீதியில் கொள்கைகளை வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் தமிழ் மக்கள் இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

KavinKumar

Share
Published by
KavinKumar

Recent Posts

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

13 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

14 hours ago

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…

14 hours ago

தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?

திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…

14 hours ago

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

15 hours ago

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

16 hours ago

This website uses cookies.