திமுக நிர்வாகியை கல்லால் அடித்த அமைச்சர் நாசரின் செயலை விமர்சித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
மொழி போர் தியாகிகளை கவுரவிக்கும் விதமாக, திருவள்ளூரில் நாளை நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் அமர்வதற்கு இருக்கை எடுத்து வருமாறு கட்சி நிர்வாகியிடம் கூறியுள்ளார். கட்சி நிர்வாகி இருக்கையை மெதுவாகவும், ஒரு இருக்கை மட்டும் எடுத்து வந்துள்ளார்.
இதை கண்டதும் ஆத்திரமடைந்த அமைச்சர் நாசர் கட்சி நிர்வாகி மீது கல் வீசினார். இதனால் கட்சி நிர்வாகிகளுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சி சமூக வலைத் தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஏற்கனவே அமைச்சர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், தற்போதை அமைச்சர் நாசரின் செயல் மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், எதிர்கட்சியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
அந்த வகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், “இந்திய வரலாற்றில் எந்த ஒரு அமைச்சராவது மக்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதுண்டா..?.
ஒழுக்கமின்மை, கண்ணியமின்மை, மக்களை அடிமைப் போல நடத்துவதுதான் திமுக,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.