இலங்கை தமிழர்களுக்கு உதவ உரிய வசதிகளை செய்யுங்க : மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

Author: Babu Lakshmanan
15 April 2022, 6:35 pm

இலங்கைத்‌ தமிழர்களுக்கு அத்தியாவசியப்‌ பொருட்களை அனுப்புவதற்கு விரைவில்‌ உரிய வசதியை செய்து தருமாறும்‌, யாழ்ப்பாணம்‌ சிறையில்‌ உள்ள மீனவர்களை விரைவில்‌ விடுதலை செய்யுமாறும்‌ கோரி, முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில்‌, கடந்த 31. 3- 2022 அன்று மாண்புமிகு இந்தியப்‌ பிரதமர்‌ அவர்களை தான்‌ சந்தித்தபோது. “இலங்கையில்‌ ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக்‌ கருத்தில்‌ கொண்டு இலங்கைத்‌ தமிழர்களுக்குத்‌ தேவையான அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ மற்றும்‌ உயிர்காக்கும்‌ மருந்துகளை தமிழ்நாடு அரசு வழங்கத்‌ தயாராக உள்ளது எனத்‌ தெரிவித்ததை சுட்டிக்காட்டியுள்ளார்‌.

மேலும்‌ கடந்த 7-4-2022 அன்று ஒன்றிய வெளியுறவுத்‌ துறை அமைச்சருடனான தமது
தொலைபேசி உரையாடலின்போது, பொருளாதார நெருக்கடியின்‌ காரணமாக இலங்கைத்‌ தமிழர்கள்‌ தங்கள்‌ நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில்‌ தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருப்பதை தான்‌ தெரிவித்த போது, இலங்கையில்‌ உள்ள இந்தியத்‌ தூதரகத்துடன்‌ உரிய ஆலோசனை செய்து. அதற்குப்‌ பிறகு இது தொடர்பான நடவடிக்கைகள்‌ குறித்துப்‌ பரிசீலிக்கலாம்‌
என்று ஒன்றிய அரசின்‌ சார்பில்‌ தெரிவிக்கப்பட்டிருந்ததையும்‌ சுட்டிக்காட்டியுள்ளார்‌.

  • Two years Bond with Raashi khanna Says Popular Actor 2 வருடமாக ராஷி கண்ணாவுடன்… சத்தியத்தை கசிய விட்ட பிரபல நடிகர்..!!
  • Close menu