Categories: Uncategorized @ta

நிலத்தை மீட்டுத்தர கோரி விவசாயி குடும்பத்துடன் தர்ணா : தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…

தருமபுரி : தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது விவசாய நிலத்தை மீட்டுதரகோரி பாதிக்கபட்ட விவசாயி தனது குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே திப்பம்பட்டி கிராமத்தில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவரது நிலத்தை அவரது மகன் வேடியப்பன் என்பவருக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தனது 3 ஏக்கர் விவசாய நிலத்தை மகன் பெயரில் பட்டா மாற்றம் செய்து கொடுத்துள்ளார். இவர்கள் கூலி வேலை செய்து குடும்பத்துடன் அதே கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டியவரி பணத்தையும் செலுத்தி வருகின்றனர். இவர்கள் பருவத்திற்கு ஏற்றால் போல் காலப்பயிர் வகைகளையும் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வேடியப்பனுக்கு தெரியாமல் திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி கிராமத்தை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் நில மோசடி செயலில் ஈடுப்பட்டு தனக்கு சொந்தமான இடத்தினை தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த நாகமரத்துப்பள்ளம் கிராமத்தில் வசிக்கும் வேலாயுதம் என எனது தந்தை பெயரில் வேறுவொரு நபரை மோசடியான முறையில் கடந்த 2020 ஆண்டு போலியான நபர்களை சாட்சிகளாக வைத்தும், வாக்காளர் அடையாள அட்டை வைத்தும் ஆவணம் செய்துள்ளார். தற்போது அந்த ஆவணத்தை கொண்டு ஜெகநாதன் என்பவர் மூன்றாம் நபருக்கு விற்பனை செய்ய முயற்சி செய்து வருகிறார்.

இதுகுறித்து அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது குடும்பத்துடன் வந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் வேடியப்பன் மற்றும் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து விசாரணை மேற்கொள்ளபட்டு உரிய நடவடிக்கை எடுக்கபடும் என உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

KavinKumar

Recent Posts

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

5 hours ago

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

7 hours ago

ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்

ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…

7 hours ago

கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?

வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…

8 hours ago

இணையத்தில் வெளியானது GOOD BAD UGLY… அதுவும் HD PRINT : பரபரப்பில் படக்குழு!

அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…

9 hours ago

அயோக்கியத்தனம்.. இதுதான் போலீஸ் ஸ்டேஷன் லட்சணமா? போனில் வெளுத்து வாங்கிய டிஐஜி வருண்குமார்!

அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…

10 hours ago

This website uses cookies.