வேலூர் : வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்ததுடன் 28 துறைகளை சேர்ந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
73 வது குடியரசு தினத்தையொட்டி வேலூர் கோட்டையில் தேசியக் கொடியை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஏற்றி வைத்த பின்னர், வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். பின்னர் சமூக நல்லிணக்க வலியுறுத்தும் வகையில் சமாதானப் புறாவை பறக்கவிட்ட ஆட்சியர்,
காவலர்களின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டார். காவலர்களின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.
சிறப்பாக பணியாற்றிய 48 காவலர்களுக்கு முதலமைச்சரின் நற்பணி பதக்கங்களும், பின்னர் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய சமூக நலத்துறை, நீர்வள ஆதாரத்துறை துறை, வருவாய் துறை, சுகாதாரத் துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட 28 பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு நற் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கொரானா பரவலைத் தடுக்கும் விதமாக அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக வெளியை பின்பற்றியும் பெற்று பங்கேற்றனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.