கோவை: அளவுக்குஅதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு டிரைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்டுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் அடுத்த கள்ளிமடை பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் மகன் ஜெயபிரகாஷ்(39). இவருக்கு சந்தோஸ் மணி என்ற மனைவி உள்ளார். டிரைவராக பணிபுரிந்து வந்த ஜெயபிரகாஷ் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு அதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
மேலும் இரவு நேரங்களில் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தார். இதற்காக தூக்க மாத்திரை சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயபிரகாஷ் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரையை சாப்பிட்டதாக கூறப்படுகிறது
இதையடுத்து அவர் நினைவிழந்த நிலையில் வீட்டில் இருந்த அவரை குடும்பத்தார் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை ஜெயபிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார் .இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.