கரூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக மகனை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த ஒரம்புபாளையம் காமராஜ் நகரில் வசிப்பவர் சடையப்பன். இவருக்கு ஜானகி என்கின்ற மனைவியும், தேவபிரகாஷ் என்கின்ற மகனும் உள்ளனர். நேற்று நள்ளிரவில் தந்தை, மகன் இருவரும் மது போதையில் இருந்த போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
அப்போது, சடையப்பன் வீட்டிலிருந்த அரிவாளால் மகனை இடுப்புக்கு கீழ் பகுதியில் வெட்டியதால் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தேவபிரகாஷை மருத்துவர்கள் பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தேவபிரகாஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீசார் சடையப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த தேவ பிரகாஷ் ஏற்கனவே அடிதடி தகராறில் சிறைக்கு சென்று தற்போது பிணையில் வந்து வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் கையெழுத்து இட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.