ஜி ஸ்கொயர் நிறுவன விவகாரம்.. பத்திரிக்கைகள்‌ எல்லாம்‌ அச்சத்தில்.. ஆட்சியாளர்கள்‌ அதிகார மமதை உச்சத்தில்‌… அண்ணாமலை காட்டம்!!

சென்னை : அதிகார மமதையின்‌ உச்சத்தில்‌, ஊடகங்களை அழுத்தலாம்‌ அச்சத்தில்‌ என்று நினைக்கும்‌ ஆளும்‌ திமுக அரசுக்கு கண்டனத்தை பதிவு செய்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஜி ஸ்கொயர்‌ என்ற தனியார்‌ நிறுவனத்தை பற்றி நான்‌ ஏற்கனவே பலமுறை பத்திரிக்கையாளர்‌ சந்இப்பிலும்‌, பத்திரிக்கை அறிக்கைகளிலும்‌ குறிப்பிட்டிருந்தேன்‌. ஆளும்கட்சியின்‌ அதிகாரமிக்க குடும்பத்தினருக்கும்‌ ஜி ஸ்கொயர்‌ நிறுவனத்திற்கும்‌ நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது ஊர்‌ அறிந்த ரகசியம்‌.

ஈசிஆர்‌ சாலை ஜி ஸ்கொயர்‌ சாலை என்ற பெயர்‌ சூட்டி இருக்கலாம்‌ என்று கூட ஒருமுறை குறிப்பிட்டிருந்தேன்‌. தமிழகத்திலுள்ள நிலம்‌ மற்றும்‌ மனை விற்பனையாளர்கள்‌ தற்போது எந்த பத்திரப்பதிவு மேற்கொள்ள முடியாத இருண்ட சூழ்நிலையில்‌ முடக்கி வைக்கப்பட்டு இருக்கிறார்கள்‌.

ஆனால்,‌ தினமும்‌ ஜி ஸ்கொயர்‌ நிறுவனத்தின்‌ பத்திரப்பதிவு நடவடிக்கைகள்‌ மட்டும்‌ கன ஜோராக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,‌ ஜி ஸ்கொயர்‌ நிறுவனம்‌, ஜூனியர்‌ விகடன்‌ பத்திரிகை மீதும்‌ ஊடகவியலாளர்கள்‌ சகோதரர்‌ மாரிதாஸ்‌ மற்றும்‌ சவுக்கு சங்கர்‌ ஆகியோர்‌ மீதும்‌ கூட்டாக ஒரு வழக்கைப்‌ பதிவு செய்கிறது.

ஒருவேளை அவர்கள்‌ பத்திரிக்கை தர்மத்தை மறந்து அத்துமீறி இருந்தால்‌ கூட, அவர்கள்‌ மீது நடவடிக்கை எடுப்பதற்கு எத்தனையோ சட்டங்கள்‌ நடைமுறையில்‌ உள்ளன. ஆனால்‌ வேண்டுமென்றே அவர்களை சிக்க வைப்பதற்காக கிரிமினல்‌ வழக்கினை ஜி ஸ்கொயர்‌ நிறுவனம்‌ பதிவு செய்கிறது.

தமிழகத்தின்‌ சாமானிய மக்கள்‌ கொலை களவு அத்துமீறல்‌ போன்ற எந்த நடவடிக்கைக்கும்‌, காவல்‌ நிலையத்தில்‌ புகார்‌ அளிக்கச்‌ சென்றாலும்‌, காவல்துறையில்‌ உடனடியாக சிஎஸ்‌ஆர் மற்றும்‌ எஃப்‌ ஐ ஆர்‌ பதிவு செய்ய இயலாது அல்லது மிகுந்த காலதாமதம்‌ ஆகும்‌.

இந்நிலையில்‌ ஜி ஸ்கொயர்‌ நிறுவனம்‌ புகார்‌ அளித்தவுடன்‌ துரிதமாக செயல்பட்ட தமிழக காவல்துறை இரவு தொடங்குவதற்குள்‌ எடுத்த நடவடிக்கை மின்னல்‌ வேகம்‌.

அதிலும்‌ தமிழகத்தில்‌ மிகத்தொன்மையான ஒரு பத்திரிக்கை நிறுவனம்‌ மற்றும்‌ அதேபோல மக்கள்‌ தொடர்பு மிக்க ஊடகவியலாளர்கள்‌, என்று தெரிந்திருந்தும்‌ புகாரின்‌ உண்மை தன்மையை அறியாமல்‌ அது குறித்து எந்தவிதமான விசாரணையும்‌ நடத்தாமல்‌ இரவோடு இரவாக நடவடிக்கை எடுத்து, எவரையும்‌ கைது செய்யும்‌ வகையில்‌ வழக்கை அமைத்திருப்பது என்பது பத்திரிக்கைகளை ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும்‌ செயலாகும்‌.

அதிகார மமதையின்‌ உச்சத்தில்‌, ஊடகங்களை அழுத்தலாம்‌ அச்சத்தில்‌ என்று ஆளும்‌ திமுக அரசு நினைக்கும்‌ என்றால்‌ பத்திரிக்கைகளின்‌ சுதந்தரம்‌ பறிக்கப்படும்‌ என்றால்‌ அதை மக்கள்‌ அனுமதிக்க மட்டார்கள்‌. காவல்துறை தன்‌ கண்ணியத்தை காற்றில்‌ பறக்கவிட்டு கண்மூடித்தனமாக செயல்படுவதை விட்டுவிட்டு நியாயமான நேர்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்‌.

ஊடகங்களுக்கும்,‌ பத்துரிக்கைகளுக்கும்‌ உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும்‌ என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின்‌ சார்பில்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?

சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…

6 hours ago

ஒரே ஒரு டயலாக் பேசுனது குத்தமா? ஷூட்டிங் ஸ்பாட்டில் லெஃப்ட் ரைட் வாங்கிய கவுண்டமணி…

கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…

7 hours ago

விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!

விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…

8 hours ago

தர்பூசணியை தாராளமாக சாப்பிடலாம்… உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு புதிய சிக்கல்!

தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…

8 hours ago

லோகேஷிடமிருந்து அந்த நடிகருக்கு பறக்கும் ஃபோன் கால், ஆனா நோ ரெஸ்பான்ஸ்? அடப்பாவமே

லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…

9 hours ago

நான் தான் பா கராத்தே பாபு- ரவி மோகனுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர்! இதான் டிவிஸ்ட்டே

கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…

10 hours ago