புதுச்சேரி : புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்துறை ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மையமாகக் மத்திய அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள மின் துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மின்துறை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய, மாநில அரசுகள் கைவிடக்கோரி நாளை முதல் மின்துறை ஊழியர்கள்,
தங்களது பணிகளை புறக்கணித்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தின் காரணமாக புதுச்சேரியில் அனைத்து விதமான மின் சேவைகளும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மின்துறை தனியார் மயமாக்கப்படாது என மாநில முதல்வர் உறுதி அளித்தால் மட்டுமே தங்களது போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் எனவும் ஊழியர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.