Categories: Uncategorized @ta

வாக்குச்சாவடிக்கு பொருட்கள் அனுப்பும் பணி தீவிரம் : ஆட்சியர் நேரில் ஆய்வு…

திருச்சி : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள், தேர்தலுக்கு தேவையான பொருட்கள் அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள நகர்புற ஊராட்சி தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் வாக்கு சாவடிகளுக்கு வாக்குப் பதிவு எந்திரங்கள், தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டுதலின்படி கிருமிநாசினிகள், வெப்பமானி உள்ளிட்ட கருவிகள் அனுப்பும் பணி திருச்சியில் பொன்மலை, அரியமங்கலம், அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோட்ட அலுவலகங்களிலிருந்து காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பும் பணி துவங்கியது.

இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒவ்வொரு கோட்டத்திற்கு உட்பட்ட வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடி முழுவதும் கட்டைகளால் வரிசை சென்று வாக்கு அளிக்க ஏதுவாக வழிகளை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகைகள் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது வாக்கு சாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் தங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

மேலும் ஒவ்வொரு வார்டுக்கு உட்பட்ட வாக்கு சாவடி மையத்திற்கு கிருமிநாசினி , முககவசம், சர்ஜிகல் ஃபேஸ் மாஸ்க், ரப்பர் கையுறை, பிபிகிட், டிஸ்போசபிள் கையுறை உள்ளிட்ட 11 விதமான பொருட்கள் அடங்கிய அட்டை பெட்டி மற்றும் அதனை அப்புறப்படுத்தி ஏதுவாக பிளாஸ்டிக் வாளிகள், மேலும், எழுது பொருட்கள், வாக்களித்த பின்பு கையில் வாக்காளர்கள் விரல்களில் வைக்கப்படும் மை புட்டி, சின்னம் மற்றும் பெயர்கள் அடங்கிய சுவரொட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டது.

திருச்சி பொன்மலை கோட்ட அலுவலகத்திலிருந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பிரபாகரன் மற்றும் சிவபாதம் தலைமையிலான அதிகாரிகள் வாக்குப் பெட்டி வைக்கப்பட்டுள்ள மையம் கதவின் சீலை கட்சி பிரமுகர்கள் முன்பாக அகற்றப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் மற்றும் வாக்குப்பதிவு மையத்தின் தேர்தல் நடத்தும் அதிகாரி ஆகியோர் லாரி மற்றும் வேன்களில் கொண்டு சென்றனர்.

வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் கொண்டு செல்லும் பணிகள் இரவுக்குள் முடிக்கப்படும். அனைத்து பணிகளையும் திருச்சி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சிவராசு நேரில் பார்வையிட்டு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

KavinKumar

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

1 day ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

1 day ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

1 day ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

1 day ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

1 day ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

1 day ago

This website uses cookies.