சாலை மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்காக Zetwerk நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் KCP நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.
கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் KCP Infra Limited நிறுவனம், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை மற்றும் உள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தென்னிந்தியாவில் 1,000க்கும் மேற்பட்ட திட்டங்களை சிறப்பான முறையில் முடித்துக் கொடுத்ததால், பல விருதுகளையும், பல்வேறு மாநில அரசுகளின் பாராட்டுக்களையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது.
அதுமட்டுமில்லாமல், தெலங்கானா, ஆந்திராவில் மத்திய அரசின் மிலிட்டரி என்ஜினியரிங் சர்வீசஸ் துறையில் அதிசிறந்த உள்கட்டமைப்பு ஒப்பந்ததாரருக்கான உரிமத்தையும், தமிழகம், கேரளாவில் முன்னணி சிவில் ஒப்பந்ததாரருக்கான உரிமத்தையும் KCP நிறுவனம் பெற்றுள்ளது.
இதுவரையில் தென்னிந்தியாவில் மட்டும் பல்வேறு திட்டப்பணிகளை சிறப்பாக செய்து வந்த KCP நிறுவனம், தனது பணிகளை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தும் விதமாக, உலகத் தரம் வாய்ந்த Zetwerk manufacturing business Pvt Ltd நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் KCP நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.சந்திரபிரகாஷ் மற்றும் Zetwerk நிறுவனத்தின் ஆர். பாலசுப்ரமணியம் ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்மூலம், அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.5000 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய உள்கட்டமைப்பு பணிகளை இருநிறுவனங்களும் இணைந்து மேற்கொள்ள இருக்கிறது.
இது குறித்து KCP நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.சந்திர பிரகாஷ் பேசுகையில், “KCP நிறுவனம் தென்னிந்தியாவில் உள்ள 4 மாநிலங்களில் பல்வேறு திட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில், 5,000க்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மிகவும் துடிப்பான நிறுவனமான இருக்கும் எங்களின் நிறுவனம், இனி வரும் ஆண்டுகளில் புதிய உச்சத்தை தொடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை,” எனக் கூறினார்.
Zetwerk நிறுவனமானது 15 நாடுகளில் சாலை மற்றும் உள்கட்டமைப்பு திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் பெங்களூரூவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.