சாலை மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்காக Zetwerk நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் KCP நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.
கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் KCP Infra Limited நிறுவனம், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை மற்றும் உள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தென்னிந்தியாவில் 1,000க்கும் மேற்பட்ட திட்டங்களை சிறப்பான முறையில் முடித்துக் கொடுத்ததால், பல விருதுகளையும், பல்வேறு மாநில அரசுகளின் பாராட்டுக்களையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது.
அதுமட்டுமில்லாமல், தெலங்கானா, ஆந்திராவில் மத்திய அரசின் மிலிட்டரி என்ஜினியரிங் சர்வீசஸ் துறையில் அதிசிறந்த உள்கட்டமைப்பு ஒப்பந்ததாரருக்கான உரிமத்தையும், தமிழகம், கேரளாவில் முன்னணி சிவில் ஒப்பந்ததாரருக்கான உரிமத்தையும் KCP நிறுவனம் பெற்றுள்ளது.
இதுவரையில் தென்னிந்தியாவில் மட்டும் பல்வேறு திட்டப்பணிகளை சிறப்பாக செய்து வந்த KCP நிறுவனம், தனது பணிகளை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தும் விதமாக, உலகத் தரம் வாய்ந்த Zetwerk manufacturing business Pvt Ltd நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் KCP நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.சந்திரபிரகாஷ் மற்றும் Zetwerk நிறுவனத்தின் ஆர். பாலசுப்ரமணியம் ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்மூலம், அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.5000 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய உள்கட்டமைப்பு பணிகளை இருநிறுவனங்களும் இணைந்து மேற்கொள்ள இருக்கிறது.
இது குறித்து KCP நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.சந்திர பிரகாஷ் பேசுகையில், “KCP நிறுவனம் தென்னிந்தியாவில் உள்ள 4 மாநிலங்களில் பல்வேறு திட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில், 5,000க்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மிகவும் துடிப்பான நிறுவனமான இருக்கும் எங்களின் நிறுவனம், இனி வரும் ஆண்டுகளில் புதிய உச்சத்தை தொடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை,” எனக் கூறினார்.
Zetwerk நிறுவனமானது 15 நாடுகளில் சாலை மற்றும் உள்கட்டமைப்பு திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் பெங்களூரூவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.