Categories: Uncategorized @ta

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கே.பி.அன்பழகன் தீவிர வாக்கு சேகரிப்பு

தருமபுரி : தருமபுரி நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

தமிழகத்தில் வருகின்ற 19ம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தருமபுரி மாவட்டத்தில் நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெறுகிறது. நகராட்சி மற்றும் பேரூராட்சியில் தலைவர் பதவி பிடிப்பதற்காக திமுக, அதிமுக மற்றும் பாமக கட்சிகளிடையே பொட்டி நிலவிவருகிறது. அதனால் அரசியல் கட்சிகளிடையே போட்டி போட்டுக்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில், முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டுகளில் மாவட்டம் முழுவதும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இன்று தருமபுரி நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வீதி வீதியாக சென்று வாக்காளர்களிடம் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை எடுத்துக்கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்திகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, நகர செயலாளர் பூக்கடை ரவி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

KavinKumar

Recent Posts

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

9 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

10 hours ago

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…

10 hours ago

தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?

திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…

10 hours ago

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

11 hours ago

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

12 hours ago

This website uses cookies.