Categories: Uncategorized @ta

திமுக திட்டத்துக்கு ஆப்பு வைத்த பாஜக.. மாஸ் அறிவிப்பு!

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் மகளிருக்கு மாதந்தோறும் 2,100 ரூபாய் வழங்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது.

மும்பை: இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ் சேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி களம் காண்கிறது. அதேபோல், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ் சேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் அடங்கிய மகா விகாஸ் கூட்டணி போட்டியிடுகிறது.

இதனால் மகாராஷ்டிரா மாநிலத் தேர்தலில் இருமுனைப் போட்டியே நிலவுகிறது. இந்த நிலையில், மும்பையில் நடந்த தேர்தல் நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். இதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்று உள்ளன.

குறிப்பாக, சங்கல்ப் பத்ரா 2024 எனும் தேர்தல் வாக்குறுதியில், மகளிருக்கு மாதம் 2,100 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனவும், முதியோர் ஓய்வூதியம் மாதம் 1,500 ரூபாயில் இருந்து 2,100 ரூபாயாக அதிகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: கேப்டன் மகனுக்கு புது பதவி.. புதிர் போட்ட பிரேமலதா விஜயகாந்த்!

அதேபோல், அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் மற்றும் காப்பீடு வழங்கப்படும் எனவும் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக, தமிழகத்தில் ஆளும் திமுக அரசு தரப்பில், மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் விதமாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

1 hour ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

2 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

2 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

2 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

3 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

3 hours ago

This website uses cookies.