கோவை: இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் மற்றும் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக கோவையில் மகாத்மா காந்தி நினைவு மதநல்லிணக்க பாதுகாப்பு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
அன்பே கடவுள் என்பதையே தனது வாழ் நெறியாகக் கொண்டு வாழ்ந்த மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளான ஜனவரி 30ஆம் தேதி முன்னிட்டு கோவையில் மகாத்மா காந்தி நினைவு மதநல்லிணக்க பாதுகாப்பு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இஸ்காப் மாநில பொது செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநிலத் தலைவர் முகம்மது ரஃபி அனைவரையும் துவக்க உரையாற்றினார். கருத்தரங்கில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், வி.எஸ். சுந்தரம் ,சுப்பிரமணியன், செல்வராஜ், சு.பழனிச்சாமி மௌனசாமி சுப்பிரமணியன், எம்.வி. ராஜன், ராபர்ட்ஸ் அஸ்ரப் அலி, திலீப்குமார் ,
நான்சி, கோமகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் பேரூர் ஆதீனம் தலைவர் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை மாவட்ட அனைத்து ஜமாத் பொதுச்செயலாளர் ஹாஜி முகமது அலி, தூய மைக்கேல் அதிதூதர் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை ஜார்ஜ் தனசேகர், சாகித்ய அகாடமி விருதாளர் கவிஞர் புவியரசு, மேனாள் பொறுப்பாசிரியர் சிதம்பரநாதன், ஆகியோர் பேசினர். பல்சமய நல்லுறவு இயக்க ஒருங்கிணைப்பாளர் எம்.எம் ராமசாமி அனைவருக்கும் சிறப்பு செய்தார். இஸ்காப் மாநில பொருளாளர் கோட்டியப்பன் நன்றியுரை வழங்கினார்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
This website uses cookies.