விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனது திருமணத்தில் தான் குடும்ப உறுப்பினர்களாக வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளை, ஆட்டுக்கிடாய், வேட்டை நாய்களை அழைத்து வந்து பங்கேற்க வைத்த நெகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றது.
அருப்புக்கோட்டை நேரு மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் அருண். கட்டட வேலை செய்து வரும் அருண் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் மாடுபிடி வீரர்கள் ஆவர். அருண் தனது நண்பர்களுடன் இணைந்து ஜல்லிக்கட்டு காளை, கிடாய் சண்டையில் பங்கேற்கும் ஆட்டு கிடாய், சிப்பிப்பாறை நாய், ஜாதி சேவல் உள்ளிட்ட நாட்டு இன விலங்குகளை வீட்டில் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் அருணுக்கும், கல்லுமடம் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவருக்கும் இன்று வெள்ளக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. இதில் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அழைப்பு விடுத்த அருண், தான் குடும்ப உறுப்பினர்களாக வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளை. ஆட்டுக்கிடாய் மற்றும் வேட்டை நாய்களையும் பங்கேற்க செய்ய விரும்பினார்.
இதை அறிந்த அவரது நண்பர்கள் ஜல்லிக்கட்டு காளை, ஆட்டுக்கிடாய், இரண்டு வேட்டை நாய்கள், ஜாதி சேவல் உள்ளிட்ட வீட்டில் வளர்க்கும் நாட்டு விலங்குகளை திருமண மண்டபத்திற்கு நேரில் அழைத்து வந்தனர். திருமணத்திற்கு வந்தவர்கள் இதைக்கண்டு ஆச்சரியமடைந்தனர்.
மேலும், அருண் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் மணமக்களாக ஜல்லிக்கட்டு காளை, ஆட்டுக் கிடாய், வேட்டை நாய்கள் மற்றும் சேவலுடனும், தனது நண்பர்களுடனும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
வீட்டில் வளர்க்கும் விலங்குகளையும் குடும்ப உறுப்பினர்களாக நினைத்து திருமணத்திற்கு அழைத்து வந்த மணமக்களின் செயல் காண்போரை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.