ஸ்டாலினின் மனைவி அழகாக இருக்கிறார் கூறிய கஞ்சா வியாபாரி கொலை : குற்றவாளிகள் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் அருகே உள்ள அ.வெள்ளோடு சிறுநாயக்கன்பட்டி வனத்து சின்னப்பர் குருசடி என்ற இடத்தில் மேட்டுப்பட்டியை சேர்ந்த ஜான் அலெக்ஸ்சாண்டர் ( 40) என்பவரை நேற்று முன்தினம் ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். கொலை நடந்த இடத்திற்கு திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குகேகார் மீனா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு கொலையில் சம்மந்தப்பட்டவர்களை பிடிக்க 6 தனிப்படை அமைத்து உத்தரவிட்டனர். இந்த கொலை தொடர்பாக அம்பாத்துரை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இதனை தொடர்ந்து நேற்று இரவு தோமையார்புரம் அருகே காட்டுப்பகுதியில் மறைந்திருந்த 6 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், ஜான் அலெக்சாண்டரை கொலை செய்துவிட்டு தப்பி வந்து மறைந்து இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஸ்டாலின் (40), சைஜூ (25), நோவா (20), பாஸ்கர் (22), ஆரோக்கியதாஸ் (26), தோமையார்புரத்தை சேர்ந்த மாதவன் (32) ஆகியோரை கைது செய்தனர். போலீசார் விசாரணையில், மேட்டுப்பட்டியை சேர்ந்த ஜான்அலெக்சாண்டர் சென்னையில் குடும்பத்தோடு தங்கி டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வந்ததாகவும், அவ்வப்போது திண்டுக்கல் வரும் ஜான் அலெக்சாண்டர் தனது நண்பரான சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த ஸ்டாலின் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா மற்றும் மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இதனிடையே இரண்டு தினங்களுக்கு முன்பு கஞ்சா போதையில் ஜான் அலெக்சாண்டரும், ஸ்டாலினும் இருந்துள்ளனர். அப்போது ஜான் அலெக்ஸ்சாண்டர் ஸ்டாலினிடம் உன் மனைவி அழகாக இருக்கிறாள். என கூறியதோடு அவரை பற்றி தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ஸ்டாலின் தனது நண்பர்களுடன் இனைந்து ஜான் அலெக்சாண்டரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் சிறுநாயக்கன்பட்டி சின்னப்பர் குருசடி என்ற இடத்தில் இருந்த ஜான் அலெஸ்சாண்டரை ஸ்டாலின் மற்றும் அவரது நண்பர்கள் வழிமறித்து என் மனைவியை தவறாக பேசுவதா என ஸ்டாலின் கேட்டதோடு தான் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் ஆகிய ஆயுதங்களை தாக்க தொடங்கியுள்ளனர்.

உயிருக்கு பயந்து தப்பி ஓடிய ஜான் அலெக்சாண்டரை விரட்டி வெட்டி கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கொலையாளிகள் பயன்படுத்திய கத்தி, அரிவாள் ஆகிய 6 ஆயுதங்களையும், தப்பி ஓடுவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 இரண்டு சக்கர வாகனங்களையும் போலீசார் கைப்பற்றினர். கொலையாளிகளை 6 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், அம்பாத்துரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், தாலுகா இன்ஸ்பெக்டர் பால்பாண்டி மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

KavinKumar

Recent Posts

கொஞ்சம் கூட யோசிக்கல.. மனைவியை கிணற்றில் தள்ளிய கணவன்… எதிர்பாரா டுவிஸ்ட்!

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…

8 minutes ago

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

15 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

16 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

17 hours ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

17 hours ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

17 hours ago

This website uses cookies.