வேலூர் : வேலூர் அருகே பெண் காவலரின் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி,பொன்னை அருகேயுள்ள பரமசாத்து கிராமத்தை சேர்ந்தவர் ஜனீஷ் குமார். இவர் ராணிப்பேட்டையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் மனைவி கனகா ஆர்.கே பேட்டை காவல்நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு திருமணமாகி எட்டு மாதங்கள் தான் ஆகிறது. கணவன்-மனைவி இருவருமே வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிடுவார்கள்.
இந்த நிலையில் இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து வீட்டின் பீரோவில் இருந்த 15 சவரன் தங்கநகைகள் ரூ.1. 25 லட்சம் ரொக்கப்பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து பொன்னை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடு போன பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சமாகும். காவலரின் வீட்டிலேயே திருடு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
This website uses cookies.