கோவை: அன்னூரில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை இறக்கி விட்டு உறுதி மொழி ஏற்க வைத்து அனுப்பி வைத்த அன்னூர் போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டி தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து கோவை நோக்கி வந்த தனியார் பேருந்து கோவை மாவட்டம் அன்னூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த பேருந்தின் படிக்கட்டுக்களில் மாணவர்கள் உட்பட இளைஞர்கள் பயணித்து வந்துள்ளனர்.
இதைப்பார்த்த அன்னூர் ஆய்வாளர் நித்யா தலைமையிலான காவல்துறையினர், பேருந்தை நிறுத்தினர்.
படிக்கட்டுகளில் பயணம் மேற்கொள்ள அனுமதித்த, பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு தலா 600 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் படியில் தொங்கியபடி பயணித்த மாணவர்கள் உட்பட இளைஞர்களை கீழே இறக்கி அறிவுரை கூறிய காவல்துறை, பேருந்தில் படியில் தொங்கியபடி பயணிக்க மாட்டோம் எனவும், மீறி பயணித்தால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவோம் எனவும் உறுதிமொழி ஏற்க செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
அன்னூரில் கோவை செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்து வருவதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதை கட்டுப்படுத்தும் முயற்சியாக அன்னூர் காவல்துறை இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
This website uses cookies.