புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு கண்டெடுத்த வழக்கு : 6 பேரும் குற்றவாளி என தீர்ப்பு!!

புதுச்சேரி : முன்னாள் முதல்வர் நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து புதுச்சேரி தலைமை நீதிமன்ற சிறப்பு நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் வீடு, எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ளது. இவரது வீட்டின் முன்பு கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தியதில் தமிழர் விடுதலை படையைச் சேர்ந்த் திருசெல்வம், தமிழரசன், தங்கராசு, காளிலிங்கம், ஜான்மார்ட்டின், கார்த்திக் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வழக்கு , புதுச்சேரி நீதிமன்றத்தில் (தலைமை நீதிமன்றம்) நடந்து வந்தது, வழக்கில் 80க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர் . இருதரப்பு வாதங்கள் முடிவடைந்ததை தொடர்ந்து இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

அதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருசெல்வம், தமிழசன், தங்கராசு, காளிலிங்கம், ஜான்மார்ட்டின், கார்த்திக் ஆகிய ஆறு பேரும் குற்றவாளிகள் என புதுச்சேரி நீதிமன்ற சிறப்பு நீதிபதி செல்வநாதன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மேலும் இதில் ஐந்து பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒருவருக்கு ஐந்து ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிபதி செல்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் 5 குற்றவாளிக்கு ரூ.3,500 அபராதமும், 1 குற்றவாளிக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 2014 ஆம் ஆண்டு முதல் வழக்கு நடைபெற்று வருவதால், நீதிபதி அறிவித்த தண்டனை ஏழு ஆண்டுகள் ஏககாலத்தில் அனுபவித்து உள்ளார்கள், எனவே இவர்கள் ஆறு பேரும் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…

22 minutes ago

மாயமான +2 மாணவியை பொதுத் தேர்வு எழுத வைத்த காவலர்… நெகிழ வைத்த கோவை சம்பவம்!

கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…

24 minutes ago

துரோகம் செய்தாரா ராஷ்மிகா? காங்கிரஸ் எம்எல்ஏ மிரட்டல்.. என்ன நடந்தது?

ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…

1 hour ago

விஜய் முதல்ல ’அத’ பண்ணட்டும்.. விஷால் ட்விஸ்ட் பேச்சு!

நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…

2 hours ago

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

13 hours ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

14 hours ago

This website uses cookies.