கோவை: பந்தள குமாரன் ஸ்ரீ ஐயப்ப சேவா டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் ரோஜா,மல்லி,தாமரை என 18 வகை மலர்களால் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
பந்தள குமாரன் ஸ்ரீ ஐயப்ப சேவா டிரஸ்ட் தலைவர் ராஜா வாத்தியார் தலைமையில் ஒவ்வொரு ஆண்டும்,கோவை வடவள்ளி,நியூ தில்லை நகர் பகுதியில் ஐயப்பசுவாமிக்கு புஷ்பாஞ்சலி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் தொடர்ந்து 20 ஆம் ஆண்டாக புஷ்பாஞ்சலி நியூ தில்லை நகர் பகுதியில் ஐயப்ப சுவாமிக்கு புஷ்பாஞ்சலி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கணபதி ஹோமம், ஸ்ரீ லக்ஷ்மி குபேர ஹோமம்,சுதர்சன மற்றும் நவக்ரஹ ஹோமங்களுடன் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து மாலை ஆயக்குடி ஸ்ரீ குமார் பாகவதர் தலைமையில் அவரது குழுவினர் ஐயப்பன் பாடல்களை பஜனையுடன் பாடி அசத்தினர்.இதனை கூடியிருந்த பக்தர்கள் பரவசத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.தொடர்ந்து ராஷ்டிரிய சனாதன சேவை சங்கத்தின் நிறுவன தலைவர் எஸ்.ராமநாதன் முன்னிலையில் ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
இதில் பதினெட்டு படிகளும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தத்ரூபமாக வீற்றிருக்கும் ஐயப்பனுக்கு தாமரை,ரோஜா,மல்லி,சாமந்தி,என 18 வகை மலர்களை கொண்டு புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற்றது.இதில் பந்தள குமாரன் ஸ்ரீ ஐயப்ப சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.