Categories: Uncategorized @ta

பயிலும் போதே துறை சார்ந்த திறனை கற்க வாய்ப்பு: ஐடி நிறுவனத்துடன் ரத்தினம் கல்லூரி ஒப்பந்தம்..!!

கோவை: மாணவர்கள் பயிலும் போதே துறை சார்ந்த கற்றல் திறனை வளர்த்து கொள்ளும் விதமாக கோவை இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி காலிபர் இண்டர் கனெக்ட் சொல்யூசன்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

நவீன காலத்திற்கு ஏற்ப மாணவர்கள் கல்லூரியில் பயிலும் கற்றல் திறனை அதிகரிக்கும் விதமாக துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்களுடன் கோவை இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி நிர்வாகம் சார்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில்,கோவையைச் சேர்ந்த காலிபர் இண்டர் கனெக்ட் சொல்யூசன்ஸ் நிறுவனமும் , இரத்தினம் கல்வி குழுமமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒப்பந்தம் செய்து கொண்டனர் . இதற்கான நிகழ்ச்சி இணையவழியாக நடைபெற்றது. இரத்தினம் கல்வி குழுமங்களின் தலைவர் மதன் ஆ.செந்தில் அவர்கள் தலைமையில் நடைபெற்ற,இதில் காலிபர் இண்டர் கனெக்ட் சொல்யூசன்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு அலுவலர் மெர்வின், தொழில்நுட்ப பிரிவின் இயக்குநர் மோகனசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

தொழில்நுட்ப முனைவர் இரத்தினம் வளாகத்தின் முதல்வர் முனைவர் நாகராஜ் , துணை முதல்வர் முனைவர் கீதா, டீன் பேராசிரியர் சதிஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில் நவீன காலத்திற்கு ஏற்ப மாணவர்கள் தங்கள் துறை சார்ந்த கற்றல் திறனை வளர்த்து கொள்ள வேண்டும் என்றும் , புதிய கண்டுபிடிப்புகள் மூலமே நம் சமூகம் வளர்ச்சி அடையும் என்றும் , மாணவர்கள் தங்களை சுற்றியுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் ஒரு தொழில் முனைவோரக மாற முடியும் என்றும் பேசினர்.

தொடர்ந்து கல்லூரி மற்றும் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் பின்னர் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் மாணவர்கள் படிக்கும் போதே நிறுவனத்தில் பயிற்சி பெற முடியும் . இந்த நிறுவனத்தின் பொறியாளர்கள் மாணவர்களுக்கு நிறுவனங்களுக்கு தேவையான பயிற்சியை கல்லூரிக்கு வந்தும், நிறுவனத்திலும் பயிற்சி அளிப்பார்கள் . மேலும் ஆசிரியர்கள் தங்களது கண்டுபிடிப்புகளையும் புதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இந்த நிறுவனத்துடன் இணைந்து வெளியிடலாம்.

மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் இந்த நிறுவனம் வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை தலைவர் அருள்ராஜ் மற்றும் அனைத்து பேராசிரியர்கள், ஆய்வக உதவியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

11 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

12 hours ago

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…

13 hours ago

தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?

திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…

13 hours ago

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

13 hours ago

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

15 hours ago

This website uses cookies.