Categories: Uncategorized @ta

சட்டமன்ற கூட்டத்தொடரை ஒரு வார காலத்திற்கு நடத்த கோரிக்கை : திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் மனு

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கு, சட்டமன்ற கூட்டத்தொடரை ஒரு வார காலத்திற்கு நடத்தக்கோரி, சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் மனு அளித்தனர்.

புதுச்சேரி மாநில 15 வது சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர் வரும் 23ம் தேதி கூட உள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரில் புதுச்சேரி மாநிலத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் மசோதா நிறைவற்றவும், மின்துறை தனியார் மய நடவடிக்கையை ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்துவது, புதுச்சேரிக்கு ஒன்றிய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல பிரச்சனைகள் குறித்து விவாதித்து, தீர்மானங்கள் நிறைவேற்ற,

கூட்டத்தொடரை ஒரு வார காலத்திற்கு மேல் நடத்த வேண்டும் என சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான இரா.சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத், செந்தில்குமார், அன்பால் கென்னடி உள்ளிட்டோர் சட்டமன்ற அலுவலகத்தில் சபாநாயகர் செல்வத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா பேசுகையில், “மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்காக ஒருவர் காலம் நடைபெறும் வகையில் சட்டப்பேரவையை கூட்ட வேண்டும், மேலும் தேர்தலின்போது பிரதமர் சொன்ன பெஸ்ட் புதுச்சேரி எந்த நிலையில் உள்ளது என கேள்வி எழுப்பிய அவர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகளுக்கு இதுவரை உதவிகள் வழங்கப்படவில்லை. புதுச்சேரியில் மக்களாட்சி நடக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசு ஆட்டிப்படைக்கும், ஆட்சியாக உள்ளதாக குற்றம்சாட்டினார்.

KavinKumar

Recent Posts

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

52 minutes ago

பெண்களுக்கு மட்டுமே திரையிடப்படும் குட் பேட் அக்லி திரைப்படம்! அதிரடி காட்டிய பிரபல திரையரங்கம்…

ஆரவார வரவேற்பில் ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படத்தை…

2 hours ago

தனியார் விடுதியில் பெண்ணுடன் தங்கியிருந்த 6 பேர் அதிரடி கைது : வனத்துறை போட்ட ஸ்கெட்ச்!

கரூர் மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு,…

2 hours ago

மதுபோதையில் இளைஞர்களுக்குள் தகராறு.. திடீரென துப்பாக்கியால் சுட்ட நண்பன் : அதிர்ந்து போன திருச்சி!

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து கேவி பேட்டை பகுதியில் சேர்ந்த பாண்டியன் என்பவர் நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகியோருடன் மது…

3 hours ago

AAA படத்துனால என்னைய யாரும் பார்க்க விரும்பல, ஆனா? -மனம் நெகிழ்ந்து பேசிய ஆதிக் ரவிச்சந்திரன்

நாளை ரிலீஸ் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள…

3 hours ago

This website uses cookies.