அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!
Author: Udayachandran RadhaKrishnan28 April 2025, 4:48 pm
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது மனைவி.
இந்த நிலையில் பாலுமகேந்திரா இறக்கும் முன்பு 2 சத்தியத்தை தன்னிடம் வாங்கியுள்ளது குறித்து நடிகை மௌனிகா பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்க: ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட் பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?
இதில் இருந்து எனக்கு ஏற்பட்ட அவமானம், வலிகள், என்னை அழிக்க நினைத்தவர்களிடம் இருந்து நான் மீண்டு வந்ததற்கு காரணம் என் குடும்பம் தான் என கூறினார்.
பாலு மகேந்திரா இறக்கும் முன்பு வாங்கிய 2 சத்தியதில் ஒன்று, நான் இறந்தபின் உனக்கு பிடித்த இயக்குநர்களுடன் படம் பண்ணு என கூறினார். இன்னொரு சத்தியம் நான் இறந்த பின் நீ இன்னொரு திருமணம் செய்ய வேண்டும் என கூறினார்.
உனக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதால்தான் உன்னை இன்னொரு திருமணம செய்து கொள்ள வேண்டும் என சத்தியம் வாங்கினேன் என கூறினார்.

ஆனால் நான், திருமணம் செய்ய வேண்டாம் என நினைக்கவில்லை, மனசு தயாரா இருக்கணும், நான் நல்லா இருந்ததாதான் ஒருத்தரை கல்யாணம் பண்ண முடியும், அவரும் நல்லா இருக்கணும், நானும் நல்லா இருக்கணும். அவரோட இடத்தில் வேறொருவரை வைத்து பார்க்க முடியாது, என வெளிப்படையாகவே கூறினார்.