பொறியாளர் தினத்தை முன்னிட்டு SMART CITY விருது : கோவை பொறியாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் மாநகராட்சி ஆணையர்!!

‘ஸ்மார்ட் சிட்டி’ எனப்படும் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களை தேர்வு செய்துள்ள மத்திய அரசு, வருடத்திற்கு ரூ.200 கோடி வீதம், ஐந்து வருடங்களுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அந்த நகரங்களின் வளர்ச்சிக்கு உதவி வருகிறது.

அந்த வகையில் கோவையில் பல திட்டங்கள் கொண்டு வந்து மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கோவையில் பல திட்டங்களுக்கு மக்கள் வரவேற்பு அளித்தனர். ஏரிகளை அழகுபடுத்துதல் மற்றும் புத்துயிர் அளிப்பது மற்றும் மாதிரி சாலைகள் மேம்பாடு ஆகியவை, இந்தியா ஸ்மார்ட் சிட்டி விருதுக்கான நான்காவது பதிப்பில் ‘ கட்டப்பட்ட சூழல் ‘ பிரிவில் கோவை முதலிடம் பெற உதவியது.

இந்த நிலையில் ஒவ்வொரு செப்டம்பர் 15ஆம் தேதி (நாளை) பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி கோயம்புத்தூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் பொறியாளர் தின விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது. வரும் 15ஆம் தேதி காலை 10 மணி அளவில் மாநகராட்சி அலுவலகத்தில் இந்த விழா நடைபெற உள்ளது.

அதன்படி 2022ஆம் ஆண்டிற்கான SMART CITY விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினர்களாக கோவை மாநகராட்சி ஆணையர் திரு. பிரதீப் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரும் துணை ஆணையருமான செல்வசுரபி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக மண்டல தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சயில் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் விதமாக குளங்கள் புனரமைப்பு மற்றும் சிறந்த மாதிரி சாலை அமைத்தல் பணிக்காக இந்திய அளவில் முதலிடம் மற்றும் தென் மண்டலத்தில் BEST CITYஆக இந்திய அளவில் தேர்வாகும் வகையில் மதிப்பிற்குரிய ஆணையர் பிரதாப் அவர்கள் தலைமையில் சிறப்பாக பணியாற்றியுள்ள கோவை மாநகராட்சி பொறியாளர்கள் அனைவரையும் போற்றி பாராட்டி விருதுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புடன் 1000 மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. மேலும் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 6 ஆயிரம் பேருக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு, தேவைப்படுவோருக்கு விலையில்லா கண் கண்ணாடிகள் வழங்கப்படுகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

துரோகம் செய்தாரா ராஷ்மிகா? காங்கிரஸ் எம்எல்ஏ மிரட்டல்.. என்ன நடந்தது?

ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…

43 minutes ago

விஜய் முதல்ல ’அத’ பண்ணட்டும்.. விஷால் ட்விஸ்ட் பேச்சு!

நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…

1 hour ago

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

12 hours ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

13 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

14 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

14 hours ago

This website uses cookies.