விறுவிறுப்பாக நடந்த தென்னிந்திய ஐவர் கால்பந்து போட்டி : வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கிய கோவை காவல் துணை ஆணையாளர்!!

கோவை புலியகுளம் பகுதியில் புலியகுளம் கால்பந்து கழகத்தின் சார்பில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 23வது ஆண்டாக ஐவர் கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.

புலியகுளம் கால்பந்து கழகத்தின் சார்பில் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஐவர் கால்பந்து போட்டிகள் நடைபெறுகிறது.

அதேபோல 23 வது ஆண்டாக பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக புலியகுளம் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் பள்ளி மைதானத்தில் விறுவிறுப்பாக கால்பந்து போட்டி நடைபெற்றது.

காலை 6:00 மணி முதல் இரவு 11 மணி வரை மின்னொளியில் இந்த போட்டிகள் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு, கேரளா மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் இருந்து வந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

மொத்தமாக கடந்த மூன்று நாட்களில் நடைபெற்ற போட்டியில் 64 குழுவினர் 640 வீரர்கள் விளையாடினர். மொத்தம் 97 ஆட்டம் ஆடப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று இறுதிக்கட்ட போட்டி நடைபெற்றது. இந்த இறுதிக்கட்ட போட்டியில் ஏ.ஜே.எஸ் அணியும் ரத்தினம் கல்லூரி அணியும் மோதின.

அப்போது இரண்டு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என்ற புள்ளியில் சமநிலையில் நின்றது. பின்னர் டைபிரேக்கர் முறையில் ஏ.ஜே எஸ் அணி மூன்று புள்ளிகளும் ரத்தினம் கல்லூரி அணி ஒரு புள்ளியும் பெற்றது. தொடர்ந்து ஏஜே எஸ் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அந்த அணிக்கு பயாஸ் நினைவு கோப்பை வழங்கப்பட்டது.

அதேபோல நடைபெற்ற போட்டியில் சிறந்த ஆட்டக்காரராக ஏ ஜே எஸ் அணியின் லோகேஷ் அறிவிக்கப்பட்டார். அதே போல சிறந்த கோல் கீப்பராக ட்ரீம் எஃசி அணியின் சதீஸ் அறிவிக்கப்பட்டார்.

தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் சிலம்பரசன், எம் கே குரூப் ஆஃப் கம்பெனிஸின் நிர்வாக இயக்குனர் மணிகண்டன், புனித அந்தோணியார் அருள்தளத்தின் பங்கு தந்தை ராயப்பன், புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பங்குதந்தை ஜார்ஜ் தனசேகர், புனித அந்தோணியார் அருள் தளத்தின் உதவி பங்கு தந்தை ஜெரால்டின்,டி-1 காவல் ஆய்வாளர் செந்தில், ஆலம் விழுதுகள் நிர்வாக இயக்குனர் மீனா ஜெயக்குமார், ஆரிய வைத்திய சாலையின் பொது மேலாளர் ரவீந்திரன்,ரெவா மோட்டார்ஸ்&பம்ப் நிர்வாக இயக்குனர் இந்திரா, வேதா ஸ்போர்ட்ஸ் கிருஷ்ணகுமார் ஆகியோர் சால்வை அணிவித்து கேடயங்கள் வழங்கினர்.

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற போட்டியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போட்டிகளை கண்டுகளித்தனர். தொடர்ந்து குழுக்கள் முறையில் பார்வையாளர்களுக்கும் பரிசளிக்கப்பட்டது.

அதேபோல கடந்த மூன்று நாட்களாக போட்டியாளர்களுக்கு மருத்துவ உதவிகள் அளித்த 108 ஆம்புலன்ஸ்ற்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு… கொந்தளித்த கனிமொழி எம்பி : என்ன நடந்தது?

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

18 minutes ago

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

13 hours ago

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

15 hours ago

ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்

ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…

15 hours ago

கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?

வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…

17 hours ago

இணையத்தில் வெளியானது GOOD BAD UGLY… அதுவும் HD PRINT : பரபரப்பில் படக்குழு!

அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…

17 hours ago

This website uses cookies.