Categories: Uncategorized @ta

நதிநீர் பிரச்சனைக்கு தீர்வுக்கான தென் மாநில முதல்வர்கள் மாநாடு அமைக்க வேண்டும்: முதல்வருக்கு தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் கோரிக்கை…

திருச்சி : நதிநீர் பிரச்சனைக்கு தீர்வுக்கான தென் மாநில முதல்வர்களின் மாநாட்டை அமைக்க வேண்டும் என முதல்வருக்கு தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கத்தின் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குருசாமி தலைமை தாங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஒருங்கிணைப்பாளர் குருசாமி பேசியதாவது:- தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கோதாவரி காவிரி இணைப்பு திட்ட மாநாடு வருகிற பிப்ரவரி மாதம் 26 மற்றும் 27ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தாமிரபரணி, வைப்பாறு, வைகை, காவிரி, தென்பெண்ணை, பாலாறு ஆற்றுப்படுகை மக்கள் மன்ற பிரதிநிதிகள், விவசாய சங்கங்கள், இந்திய ஆற்றின் நீர் நிர்வாக பிரதிநிதிகள் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.

இந்த மாநாட்டில் கோதாவரி காவிரி திட்டத்தில் தமிழகத்தின் நீர் தேவையை தெலுங்கானா மாநிலத்தின் மக்களிடத்தும், அம்மாநில அரசியல் கட்சிகளிடத்தும், வலிமையாக எடுத்துரைத்திட தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வது மிக மிக அவசியமானதாகும். எனவே அரசியல் கட்சிகள் தங்களது கட்சியின் பிரதிநிதியை இந்த மாநாட்டுக்கு அனுப்பி வைத்திடக் கோரியும், தெலுங்கானா ஆந்திரா கர்நாடகம் தமிழகம் ஆகிய தென்மாநில அரசுகள் அடங்கிய முதல்வர்களின் மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கத்தின் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் ஆத்தூர் சங்கரையா, வயலூர் ராஜேந்திரன் புதுக்கோட்டை ராஜசேகர் லால்குடி வீரசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

KavinKumar

Recent Posts

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

11 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

12 hours ago

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…

13 hours ago

தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?

திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…

13 hours ago

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

13 hours ago

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

14 hours ago

This website uses cookies.