திருப்பூர் : காங்கேயத்தில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் அடிப்படை வசதிகள் இல்லை என கூறி இலங்கை அகதிகள் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் – கரூர் சாலையில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் செயல்பட்டு வருகிறது. இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள முகாமில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும்,
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த இலங்கை அகதிகள் 100க்கும் மேற்பட்டோர் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மறியல் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் முடிவுக்கு வந்தது. மறியல் போராட்டத்தின் போது மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.