திருப்பூர் : காங்கேயத்தில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் அடிப்படை வசதிகள் இல்லை என கூறி இலங்கை அகதிகள் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் – கரூர் சாலையில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் செயல்பட்டு வருகிறது. இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள முகாமில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும்,
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த இலங்கை அகதிகள் 100க்கும் மேற்பட்டோர் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மறியல் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் முடிவுக்கு வந்தது. மறியல் போராட்டத்தின் போது மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
ஆரவார வரவேற்பில் ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படத்தை…
கரூர் மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு,…
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து கேவி பேட்டை பகுதியில் சேர்ந்த பாண்டியன் என்பவர் நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகியோருடன் மது…
நாளை ரிலீஸ் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள…
This website uses cookies.