டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, சுதந்திரத்திற்கு முன்பே இந்தியாவின் பாதுகாப்புத் துறை மிகவும் வலுவாக இருந்தது என்பது பலருக்குத் தெரியாது. இரண்டாம் உலகப் போரின்போது நாம் பாதுகாப்பு துறையில் ஒரு இறக்குமதியாளராக இருந்தோம்.
போதைக்கு அடிமையானவர்கள் போன்று நாம் சாதாரண பாதுகாப்பு பொருட்களுக்கு கூட வெளிநாட்டை சார்ந்து இருக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டோம்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அடிமையாகி கிடந்தோம். ஆனால் இன்று கடந்த 4-5 ஆண்டுகளில் குறுகிய காலத்தில், நமது பாதுகாப்பு இறக்குமதி சுமார் 21 சதவீதம் குறைந்துள்ளது.
இதன் மூலம் நாம் முன்னர் பாதுகாப்பு இறக்குமதியாளராக இருந்து தற்போது பாதுகாப்புதுறை ஏற்றுமதியாளராக முன்னேறி வருகிறோம். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15க்குள் கடற்படைக்கு 75 உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்குவது முதல் படியாகும்.
நாம் நமது தயாரிப்புகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்றால், உலகம் நம்மிடம் முதலீடு செய்யும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? நமது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் மீது நாம் நம்பிக்கை ஊட்டியபோது, உலகமே முன் வந்தது.
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15க்குள் கடற்படைக்கு 75 உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்குவது முதல் படியாகும். 100 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் நேரத்தில் இந்தியாவின் பாதுகாப்பை வரலாறு காணாத உயரத்திற்கு கொண்டு செல்வதே இலக்காக இருக்க வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.
நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், கப்பற்டை தலைமை தளபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.