அண்ணாமலையார் கோவிலில் இரண்டாவது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்து கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை ஆறு மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 4 மணி நேரம் காத்திருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
பௌர்ணமி நேற்று மாலை 3:58 மணிக்கு தொடங்கி இன்று பிற்பகல் 3:07 மணி வரை உள்ளதால் காவல்துறை சார்பில் மகா தீபத்தன்று நேற்று போடப்பட்டிருந்த அதே 5 அடுக்கு பாதுகாப்பு மற்றும் 14 ஆயிரம் போலீசார் இன்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்ணாமலையார் கோவிலில் தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்களை கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாதவாறு ராஜகோபுரம் வழியாக காவல் துறையினர் உள்ளே தரிசனத்திற்கு ஏற்றவாறு வரிசைப்படுத்தி எந்த சிரமம் இன்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்து கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றார்கள்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.