ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புது வடவள்ளி கிராமத்தில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோவில் திருவிழா வரும் 31ஆம் தேதி நடைபெற உள்ளது.
இத் திருவிழா நாளை பூச்சாற்றுடன் தொடங்க உள்ள நிலையில் இன்று தீர்த்த குடம் எடுப்பதற்காக டாட்டா ஏஸ் வேனில் புது வடவள்ளி கிராமத்திலிருந்து கெஞ்சனூர் கிராமத்தில் உள்ள பவானி ஆற்றுக்கு பக்தர்கள் வந்துள்ளனர்.
இந்நிலையில் தீர்த்த குடம் எடுத்துக்கொண்டு கோவிலுக்கு திரும்பி செல்லும்பொழுது வானவேடிக்கைக்காக பயன்படுத்தப்படும் பட்டாசுகள் கொண்டு வந்த வாகனத்தில் திடீரென எதிர்பாராத விதமாக பட்டாசுகள் வெடித்துள்ளது. இதில் வாகனத்தில் வந்த எட்டு இளைஞர்கள் காலில் தீக்காயம் பட்டு விபத்துக்குள்ளாகினர்.
இதனையடுத்து தீக்காயம் ஏற்பட்ட 8 இளைஞர்களை மீட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.