ராணிப்பேட்டை அருகே முன்விரோதம் காரணமாக விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற மனைவியின் தந்தையை மருமகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்காடு அடுத்த கடப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சசிதரன் (45). இவருக்கு திருமணமாகி இரு மகன், இரு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகளான சினேகாவிற்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் சிநேகா, பக்கத்து ஊரான கீராம்பாடி பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்கு ஒருசில நாட்கள் முன்பு அவருடன் சென்று திருமணம் செய்து கொண்டார். இப்போது சினேகாவிற்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில், தந்தை சசிதரனும், மகள் சினேகாவும் பக்கத்து பக்கத்து கிராமத்தில் உள்ள காரணத்தினாலும், கடப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்த சசிதரனுக்கு கீழம்பாடி பகுதியில் 13 ஏக்கர் விவசாய நிலம் உள்ள காரணத்தினாலும், அடிக்கடி அப்பகுதிக்கு வந்து செல்லும்போது, இரு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இன்று அதிகாலை தனது விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்ச வந்த சசிதரன் அவ்வழியே கொண்டிருந்த விக்னேஷும் சசிதரனும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஆத்திரமடைந்த சினேகாவின் கணவரும் சசிதரனின் மருமகனுமான விக்னேஷ் மற்றும் அவருக்கு அண்ணன் தம்பி முறை உடைய மூன்று நபர்களுடன் கடப்பாறை மற்றும் கத்தியை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சசிதரனை மீட்ட அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சசிதரன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆற்காடு கிராமிய காவல்துறையினர் சசிதரனின் மருமகனான விக்னேஷ் மற்றும் பசுபதி ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் சௌந்தர்ராஜன் லோகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்
காதல் திருமணத்தால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மருமகனே மாமனாரை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.