கோவை: கோவையில் கெட்டிமேள வாத்தியத்திற்கு பதிலாக ஏழு வகை தோலிசை கருவிகள் கொண்டு காதலர் தினத்தில் திருமண வைபோவத்தை நடத்தியுள்ளனர் தம்பதியினர்.
திருமணம் என்றாலே “கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்ற வார்த்தை நமக்கு நியாபகத்துக்கு வரும். கெட்டிமேளம் முளங்க கல்யாணம் நடப்பது என்ற வழக்கத்தை மாற்றி அமைத்துள்ளனர் கோவையை சேர்ந்த தம்பதியினர்.கோவையைச் சேர்ந்த ஆயுதம் அறக்கட்டளையின் நிறுவனர் விவேக் மற்றும் ஸ்ரீ வித்யா ஆகியோரின் திருமணம் நிச்சயக்கப்பட்டு இன்று நடைபெற்றது.
காதலர் தினத்தன்று நடைபெறும் இந்த கல்யாணத்தை சிறப்பாகவும், வித்தியாசமான முறையிலும் நடத்த வேண்டும் என்று நினைத்த தம்பதியினர் கெட்டிமேள வாத்தியதிற்கு பதிலாக பறை, தவில், பம்பை, உடுக்கை, உருமி, முரசு, தமரு உட்பட 7 வகையான தோலிசைக் கருவிகள் கொண்டு மாங்கல்ய வாத்தியமாக கொண்டு திருமணத்தை நடத்தியுள்ளனர்.
தவில் நாதஸ்வரம் மட்டுமே கொண்டு நடந்த மாங்கல்ய வாத்தியத்தில் கலை ரீதியாக ஓர் சமூக மாற்றம் கொண்டுவரவும், பறை உள்ளிட்ட இசைக் கருவிகளை மங்கல காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என ஓர் புது முயற்சியில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. வழக்கமாக கெட்டி மேளம் முழங்க திருமணத்தை பார்த்த மக்கள் வித்யாசமான இசையில் திருமணத்தைப் பார்த்து வியந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.