திருவள்ளூர்: ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் சீத்தஞ்சேரி பகுதியில் கை கால்களை இழந்த சின்னப்பரெட்டி என்ற முதியவரை நலம் விசாரித்து விட்டு ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
சீத்தஞ்சேரி காட்டு சாலையில் கலையரசன் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ மீது திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை நோக்கி சென்ற மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த லாரி மோதியதில் நெல்வாய் கிராமத்தை சேர்ந்த முரளி என்பவரது மனைவி ஜோதி (40) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் ஆட்டோவில் வந்த சாரதாம்பாள், பொம்மி, வைஜெயந்திமாலா,உஷாராணி, சரஸ்வதி ஆகிய 5 பேரும் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த ஜோதியின் உடலை மீட்டு பென்னாலூர் பேட்டை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கை கால் இழந்த முதியவரை பார்த்து விட்டு வீடு திரும்பிய போது நடைபெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது,
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.