திண்டுக்கல்: மருத்துவக்கல்லூரி சாலை ஒன்றில் எரிந்த நிலையில் பெண் சடலமாக மீட்பு தற்கொலை செய்து கொண்டாரா? யாரேனும் தீ வைத்து எரித்து கொன்றார்களா. என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சாலை சந்திப்பில் உள்ளது ஜோசப் காலனி. இந்த சாலையில் அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் முற்றிலும் எரிந்த நிலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடப்பது குறித்து நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த போலீசார் அப்பெண் குறித்து விசாரணை நடத்தினர் . உடலின் முகம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதி எரிந்த நிலையில் இருந்ததால் உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. இறந்த பெண்ணின் அருகே பெட்ரோல் கேன் ஒன்று கிடந்தது.
அதனை கைப்பற்றிய போலீசார், உடலை உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.
அந்தப் பெண் பெட்ரோல் ஊற்றி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா?. யாரேனும் எரித்துக் கொலை செய்துள்ளார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.